தமிழகம் குறித்த அமித்ஷாவின் விமர்சனத்திற்கு தலைமை உரிய பதிலளிக்கும்: ஆர்.பி.உதயகுமார்

தமிழகம் குறித்த அமித்ஷாவின் விமர்சனத்திற்கு தலைமை உரிய பதிலளிக்கும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

பொதுக்கூட்டங்களில் ஆதாரத்தோடு யாரும் குற்றம்சாட்டுவதில்லை. தன் இயக்க தொண்டர்கள் முன்னாள் பேசும் போது என்ன வேண்டுமானாலும் பேசலாம்.

அப்படி விமர்சனம் செய்தது எல்லை தாண்டியுள்ளதா, இல்லையா என்பதை எங்களின் தலைமை முடிவு செய்யும். அதற்குரிய பதிலையும், அதற்கான நடவடிக்கையையும் தலைமை நிச்சயம் மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

amithshah uthayakumar
இதையும் படியுங்கள்
Subscribe