Skip to main content

''முதல்வர் ஆளுநரை விரோதியைப் போல் பார்க்கிறார்''- வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

Published on 19/04/2022 | Edited on 19/04/2022

 

 '' The Chief Minister repeatedly sees the Governor as something hostile '' - Vanathi Srinivasan

 

மாநில முதல்வர் ஆளுநரை விரோதியைப் போல் பார்ப்பதாக  பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

 

'போஷன் அபியான்' எனும் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு வழங்குவது தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், ''ஊட்டச்சத்து குறைபாட்டினை குழந்தையிலேயே தாய் கர்ப்பிணியாக இருக்கும்போதே சரிசெய்துவிட்டால் அதுவே ஆரோக்கியமான இந்தியாவிற்கு வழிவகுக்கும் என பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறார். அதனால் தான் 'போஷன் அபியான்' என்ற இந்த திட்டத்தை நாடு முழுக்க மத்திய அரசின் நிதியுதவியோடு, மாநில அரசுகளின் பங்களிப்போடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசியலமைப்பு சட்டத்தின்படி மாநிலத்தின் முதல்வர், ஆளுநர் என இருவருக்கும் தனித்தனி அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைதான் உயர்ந்தது, அல்லது நீதித்துறைதான் உயர்ந்தது, அல்லது நிர்வாகத்தில் இருக்கக்கூடியவர்கள்தான் அமல்படுத்தி முடிவெடுக்கக்கூடியவர்கள், எனவே அவர்கள் உயர்ந்தவர்கள் என இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கிடையாது. ஆனால் முதல்வர் திரும்ப திரும்ப ஆளுநரை ஏதோ விரோதியைப் பார்ப்பதுபோல் பார்க்கிறார்கள்.

 

சட்டமன்றத்தில் என்ன தீர்மானம் போட்டாலும் அதை அப்படியே ஆளுநர் அமல்படுத்த வேண்டும் என்பது கிடையாது.  இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநருக்கு சில வரைமுறைகள் உள்ளது. அப்படி ஆளுநர் சட்டப்படி நடக்கவில்லை என்றால் நீதித்துறையின் வாயிலாக நீங்கள் கேள்வி கேட்கலாமே தவிர தெருவில் இறங்கி ஆளுநரை அவமானப்படுத்துவதையோ, அசிங்கப்படுத்துவதையோ நிச்சயமாக பாஜக ஒத்துக்கொள்ளாது. இளையராஜா மோடியை ஆதரித்துப் பேசினால் பதவிக்காக பேசுகிறார் என்று சொல்கிறார்கள். அவர் மட்டுமல்ல மோடியை ஆதரித்து யார் பேசினாலும் பதவிக்காக, பயத்தால் பேசுகிறார்கள் அல்லது அவர்களுக்கு பின்னல் பாஜக, ஆர்.எஸ்.எஸ் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இதேபோல் மோடியை விமர்சிக்கும் நபர்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? அந்த கேள்வியை நாங்கள் கேட்கிறோம். மோடியை ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நபர்கள் அதுவும் மக்கள் பிரதிநிதிகளே அவருக்கு மரியாதை கொடுக்காமல் நடந்துகொள்கிறார்கள் என்றால் அவர்கள் பின்னால் இருப்பது யார்?'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.