தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (30/11/2021) தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த வீரர்கள் பி. பழனிக்குமார், கே. கருப்பசாமி, கே. ஏகாம்பரம் ஆகியோரின் குடும்பத்தினருக்குத் தலா ரூபாய் 20 லட்சத்தை நேரில் வழங்கினார்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு இ.ஆ.ப., பொதுத்துறைச் செயலாளர் டி. ஜகந்நாதன் இ.ஆ.ப., பொதுத்துறைச் சிறப்புச் செயலாளர் வி. கலையரசி இ.ஆ.ப., உள்ளிட்டோர் உடனிருந்தனர்.