Published on 20/11/2021 | Edited on 20/11/2021

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20/11/2021) சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், கோயம்புத்தூரைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன் ராகுல் ராமை நேரில் அழைத்து பாராட்டினார்.,
இந்த சிறுவன் 1330 திருக்குறள், ஆத்திச்சூடி, நாலடியார், குறிஞ்சிப்பாட்டு, 200 உலக நாடுகளின் பெயர்கள், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள், பாரதியார் கவிதைகள் போன்றவற்றை ,மனப்பாடமாக ஒப்புவிக்கும் திறமை அனைவரையும் வியக்க வைக்கிறது
இந்த நிகழ்வின் போது, சிறுவனின் பெற்றோர் கருணா ஹரிராம், கீதா ஆகியோர் உடனிருந்தனர்.