தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (27/12/2021) சென்னையில், உடல்நலக்குறைவால் காலமான பின்னணி பாடகர் வழுவூர் மாணிக்க விநாயகத்தின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.