Skip to main content

அரசு பள்ளி ஆசிரியருக்கு முதல்வர் பாராட்டு! கரோனா காலத்திலும் கல்விப்பணி!

Published on 01/08/2020 | Edited on 01/08/2020
Mahalakshmi Teacher

 

கரோனா காலத்திலும் ஆசிரியை ஒருவர் தன் மாணவர்கள் மீது கொண்டுள்ள அக்கறையால் அவர்கள் வீடுகளுக்கே சென்று கல்வி கற்பிப்பதை முதல்வர் பழனிச்சாமி பாராட்டியுள்ளார். கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டை அடுத்துள்ள பாலூரைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (49). தமிழ் பட்டதாரி ஆசிரியையான இவர் நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி கடந்த 8 ஆண்டுகளாக ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

 

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கு தமிழ் பாடம் எடுத்து நடத்தி வருகிறார். சில மாதங்களாக தமிழகம் முழுவதும் கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பிள்ளைகளுக்கு வகுப்புகள் நடத்தி வருகின்றன.

 

இந்த நிலையில், அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியை மகாலட்சுமி, அவர்கள் தனது கணவர் திருஞானமூர்த்தி உதவியோடு தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று அவர்களை அழைத்து அப்பகுதியில் உள்ள மரத்தடியில் சமூக இடைவெளியைக் கடைபிடித்து உட்கார வைத்து பாடம் நடத்தி வருகிறார்.

 

அதோடு கரோனா பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்துகிறார் அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வியின் மீது அக்கறை எடுத்துக்கொண்டு அவர்களை திறந்தவெளியில், சமூக இடைவெளி விட்டு அமர வைத்து பாடம் நடத்தும் ஆசிரியை மகாலட்சுமியின் பணியை கண்டு அப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

 

கரோனா பரவல் காரணமாக பலரும் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அச்சப்பட்டு வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள் அப்படிப்பட்ட நிலையில் அந்த அச்சத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு கல்வி பணியாற்றும் ஆசிரியையின் அரும்பணியை அறிந்த தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் ட்விட்டர் மூலம் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

 

“ஊரடங்கு காலத்தில் மாணவ-மாணவிகளின் வீடுகளுக்கு சென்று, அவர்கள் படிப்பு முன்னேற்றத்திற்கு பாடம் நடத்தி வழிமுறைகளைக் கூறும் நடுவீரப்பட்டு அரசு பள்ளி தமிழாசிரியை மகாலட்சுமியின் செயல் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது அவருக்கும் அவர் சேவைக்கும் எனது வாழ்த்துகளும், பாராட்டுகளும்” என்று முதல்வர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

 

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகா முரி அவர்கள் ஆசிரியை மகாலட்சுமி நேரில் அழைத்து அவருக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் கூறியுள்ளார். இவரைப் போன்று அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியை ஆசிரியர்கள் அவரவர் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று கல்வியையும் கரோனா பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்கு முன்வர வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கெஜ்ரிவாலை பதவி நீக்கக் கோரும் மனு; உயர் நீதிமன்றம் அதிரடி! 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Petition seeking impeachment of Kejriwal; High Court action

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இதற்கிடையே அரவிந்த் ஜெஜ்ரிவாலை டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி இந்து சேனா என்ற அமைப்பின் தேசிய தலைவர் விஷ்னு குப்தா என்பவர் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

Next Story

திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Arvind Kejriwal in Tihar Jail

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை என 7 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணைக் காவல் விதித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் பின்னர் அமலாக்கத்துறையின் விசாரணைக் காவல் முடிந்து கெஜ்ரிவால் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கடந்த 28 ஆம் தேதி (28.03.2024) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கெஜ்ரிவால் காவலை 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரியது. அதற்கு நாங்கள் விரும்பும் வரை அமலாக்கத்துறை எங்களை விசாரிக்கலாம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இத்தகைய சூழலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டித்து ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 11:30 மணிக்கு கெஜ்ரிவாலை மீண்டும் ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Arvind Kejriwal in Tihar Jail

மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் நேற்று (31.03.2024) ‘ஜனநாயகத்தை காப்போம்’ என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், ஜம்மு -காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா, பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. டெரெக் ஓ பிரையன், தி.மு.க. சார்பில் திருச்சி சிவா எம்.பி., ஜார்கண்ட் மாநில முதல்வர் சம்பாய் சோரன், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரும், ஜார்கண்ட் முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் சரத்பவார், டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, சுனிதா கெஜ்ரிவால் என 20க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Arvind Kejriwal in Tihar Jail

இந்நிலையில் அமலாக்கத்துறை காவல் முடிந்து அரவிந்த் கெஜிரிவால் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று (01.04.2024) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ‘கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை நீட்டிக்க தேவையில்லை’ என அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.