கவிஞர் பிறைசூடன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர்! (படங்கள்)

திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் (65) நேற்று (09.10.2021) சென்னையில் காலமானார். தமிழ்த் திரையுலகில் 400க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 1,400க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர் பிறைசூடன். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்த இவர், அவருடைய சினிமா பயணத்திற்குப் பிறகு சென்னையில் குடும்பத்துடன் வசித்துவந்தார்.

எந்தவித உடல்நலக் குறைபாடும் இல்லாத நிலையில் நேற்று மாலை குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்த அவர் திடீரென உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த கவிஞர் பிறைசூடனின் உடலுக்கு எழுத்தாளர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கவிஞர் பிறைசூடன் இல்லத்திற்கு நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

cm stalin passed away song writer
இதையும் படியுங்கள்
Subscribe