Skip to main content

விஷவண்டுகள் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

Chief Minister M.K.Stalin financial assistance to the family of the person

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் விஷ வண்டுகள் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார்.

 

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், 80 - ராதா நல்லூர் கிராமம், அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த செண்டாய் என்பவர் மகன் வீரமணி என்பவர் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி திருக்கடையூர் கிராமத்தில் மாங்காய் பறிக்கும் வேலை செய்து கொண்டிருக்கும் போது கதண்டு என்கிற விஷ வண்டுகள் தாக்கி காயமடைந்தார், இதையடுத்து திருக்கடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று (02.09.2023) காலை உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

 

உயிரிழந்த வீரமணியின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இரண்டு இலட்ச ரூபாய் நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்