தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26/12/2021) நாவலர் இரா.நெடுஞ்செழியனின் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள நாவலர் நெடுஞ்செழியனின் சிலையைத் திறந்து வைத்து மலர்தூவி மரியாதைச் செலுத்தினார். மேலும், நாவலர் இ.ரா.நெடுஞ்செழியனின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அரசின் நூலுரிமைத் தொகையை இரா.நெடுஞ்செழியனின் குடும்பத்தாருக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் மகேசன் காசிராஜன் இ.ஆ.ப., நாவலர் இ.ரா.நெடுஞ்செழியன் குடும்பத்தினர் மற்றும் அரசு உயரதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.