Advertisment

இலங்கைக்கு கப்பலை கொடியசைத்து அனுப்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! (படங்கள்) 

தமிழக அரசு சார்பில் இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

Advertisment

இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள 40,000 ஆயிரம் டன் அரிசி, 15 கோடி ரூபாய் மதிப்பிலான 500 டன் பால் பவுடர், 28 கோடி ரூபாய் மதிப்புள்ள 137 வகையான உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கைக்கு மொத்தம் 123 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிவாரணப் பொருட்கள் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisment

சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

srilanka chief minister Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe