Chief Minister MK Stalin opens Expanded Jayangondam bus stand

Advertisment

இன்று (08.12.2021) புதன்கிழமை காலை, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் ரூபாய் 3 கோடி மதிப்பில் விரிவுபடுத்தப்பட்ட ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தை காணொளி வாயிலாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு அதனை ஒப்படைத்தார்.

Chief Minister MK Stalin opens Expanded Jayangondam bus stand

Advertisment

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கான், உடையார்பாளையம் கோட்டாட்சியர் அமர்நாத், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் ஆனந்தன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் கலைகதிரவன், நகராட்சி ஆணையர் சுபாஷினி, நகராட்சி பொறியாளர் சித்ரா மற்றும் திமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.