அரசுப் பள்ளியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு! (படங்கள்) 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (27/10/2021) விழுப்புரம் மாவட்டம், முதலியார்குப்பத்தில் 'இல்லம் தேடிக் கல்வி' திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக செல்லும் வழியில், செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கத்தில் உள்ள பெ.கிருஷ்ணா அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடினார். அதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுத் தயாரிப்பையும் முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்வின்போது, தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

chief minister Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe