மேலும் கூடுதல் தளர்வுகள்? - முதலமைச்சர் இன்று ஆலோசனை!

coronavirus lockdown additional relaxation chief minister mkstalin discussion

வரும் ஜூலை 31ஆம் தேதியுடன் (நாளை) தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் முடிவுறும் நிலையில், மேலும் கூடுதல் தளர்வுகளை அளிப்பது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (30/07/2021) ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், வருவாய்த்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்த ஆலோசனையில் தமிழ்நாட்டில் திரையரங்குகளைத் திறப்பது, பள்ளி மற்றும் கல்லூரிகளைத் திறப்பது, கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசிபோடும் பணிகள் ஆகியவை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து இன்று மாலையோ, நாளையோ தமிழ்நாடுஅரசு,கூடுதல் தளர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

chief minister coronavirus lockdown Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe