Advertisment

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்! (படங்கள்) 

தமிழ்நாடு முழுவதும் இன்று (23/10/2021) நடைபெற்ற ஆறாவது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினையொட்டி,சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கம், கண்ணகி நகரில் உள்ள அரசு இ- சேவை மையத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

Advertisment

அதேபோல், கண்ணகி நகரில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்ட முதலமைச்சர், பதிவேடுகளை ஆய்வு செய்தார்

Advertisment

இந்த நிகழ்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

chief minister coronavirus vaccine Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe