Published on 28/10/2021 | Edited on 28/10/2021
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (28/10/2021) காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறுபான்மை சமூகத்தினருக்கான சிறப்புத் திட்டங்கள் மற்றும் தொடர்புடைய தகவல்கள் அடங்கிய கையேட்டினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்ஃபோன்ஸ், துணைத் தலைவர் டாக்டர் டி. மஸ்தான், செயலாளர் தமிமுன் அன்சாரி, உறுப்பினர்கள் இருதயம், மௌர்ய குப்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.