Skip to main content

“மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவித்திருக்கிறார்!” - அமைச்சர் சக்கரபாணி 

Published on 12/08/2022 | Edited on 12/08/2022

 

“The Chief Minister has announced various schemes for the students!” - Minister Sakkrapani

 

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் ஒட்டன்சத்திரம் கே.ஆர். மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சியில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழியேற்றுக் கொண்டனர். அதன் பின் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “தமிழக முதல்வர் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அவற்றைச் செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் போதைப் பொருட்களை ஒழிக்க மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அதன் விளைவாக தமிழகம் முழுவதும் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடத்த அறிவுறுத்தியுள்ளார்.

 

இதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் படிக்கின்ற காலத்தில் போதைக்கு அடிமையாவதை தடுக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. மாணவர்கள் மட்டுமின்றி நண்பர்கள், உறவினர்களிடையே போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வருங்கால சமுதாயத்தை உருவாக்கும் வல்லமை படைத்தவர்கள் இளைஞர்கள். தமிழ்நாடு போதைப் பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். வெளிநாடுகள் வெளிமாநிலங்களிலிருந்து போதைப் பொருட்கள் பல்வேறு வடிவங்களில் தமிழகத்தில் விற்பனையாகிறது. அவற்றை ஒழிக்க இந்த 2 நிமிட உறுதிமொழி எடுப்பதோடு நாம் இருந்துவிடக் கூடாது. போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல வேண்டும்.

 

தமிழக முதல்வர் மாணவ மாணவிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அரசுப் பள்ளியில் படித்த மாணவ மாணவிகளுக்கு மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டம் உள்ளிட்ட தொழில் பிரிவு பாடங்களில் படிக்க 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன் காரணமாக தற்போது அரசுப் பள்ளிகளில் மாணவ மாணவிகள் சேர்க்கை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நபார்டு திட்டத்தில் ரூ.700 கோடி மதிப்பீட்டில் பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

அது போல், மாணவ மாணவிகள் உயர்கல்வி பெறுவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வி மேம்பாட்டிற்காக 4 அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒட்டன் சத்திரத்தில் ஒரு தொழிற்பயிற்சி நிலையம் அமையவுள்ளது. இங்கு பல்வேறு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படும். இதன்மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும். திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண்மை கல்லூரி கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க அறிவித்து அதற்கான உணவுப் பட்டியலையும் வெளியிட்டுள்ளார். மாணவ பருவம் மிகவும் முக்கியமான பருவம். மாணவ மாணவிகள் நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேறி பெற்றோருக்கும் பள்ளிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்” என்று கூறினார்.

 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பொன் ராஜ், ஒட்டன்சத்திரம் நகராட்சி துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் அய்யம்மாள் உள்பட பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.