Skip to main content

எஸ்.எஸ்.ஐ. குடும்பத்திற்கு முதலமைச்சர் ரூபாய் 1 கோடி நிதியை வழங்கினார்!

Published on 24/11/2021 | Edited on 24/11/2021

 

S.S.I. Chief Minister gave Rs 1 crore to the family!

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (24/11/2021) தலைமைச் செயலகத்தில், காவல் பணியின்போது வீர மரணமடைந்த திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் உட்கோட்டம், நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.) பூமிநாதனின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 1 கோடி ரூபாய்க்கான காசோலையை அவரது மனைவி கவிதாவிடம் வழங்கினார். 

 

இந்நிகழ்வின்போது, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர் இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு இ.கா.ப., பூமிநாதனின் மகன் குகன்பிரசாத் ஆகியோர் உடனிருந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்