Skip to main content

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏமாற்றுகிறார் - கொ.ம.தே.க. ஈஸ்வரன்!

Published on 08/08/2019 | Edited on 08/08/2019

"மழைநீரை சேமிக்கின்ற மக்களின் எண்ணங்களுக்கு தமிழக அரசு ஆதரவாக இல்லை.முதலமைச்சரின் உத்தரவு ஏமாற்று வேலை" என கூறிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன் மேலும் கூறும்போது,

"தமிழகம் முழுவதும் ஏரி, குளங்களை தமிழக அரசு தூர்வார ஆர்வம் காட்டாததால் பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் இணைந்து ஏரி, குளங்களை தூர்வாரி மழைநீரை சேமிக்கின்ற முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள். ஆனால் அந்த பணிகளுக்கு அரசு தரப்பில் அனுமதி அளிப்பதற்கே தாமதப்படுத்துகிறார்கள். போராடி அனுமதி பெற்றாலும் ஒத்துழைப்பு தர மறுக்கிறார்கள்.

 

eswaran

 

கோவையில் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இருக்கின்ற ஆச்சான் குளம் மிகப்பெரிய குளம். 20 கிராமங்களில் நிலத்தடிநீரை மேம்படுத்தக் கூடிய குளம். பல ஆண்டுகளாக தூர்வாராமல் கிடப்பிலே போடப்பட்டதால் மழைநீரை சேமிக்கின்ற கொள்ளளவு வெகுவாக குறைந்து போனது. பொதுமக்களின் தொடர் கோரிக்கைகளும், போராட்டங்களும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆனது. ஒவ்வொரு தேர்தலிலும் ஆச்சான் குளம் தூர்வாரப்படும் என்பது தேர்தல் வாக்குறுதியாகவே இருந்தது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம் ஆச்சான் குளத்தை தூர்வார நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். வெற்றி பெற்ற பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனை சந்தித்து கேட்டபோது 75 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி நானே முன்னின்று குளத்தை தூர்வாருகின்ற பணிகளை முடித்து வைக்கிறேன் என்றார். 

சொன்னபடியே ஆச்சான் குளத்திற்கு வந்து ஒரு கூட்டத்தை கூட்டி நிதி ஒதுக்குவதை பற்றியும், தூர்வாருகின்ற பணிகளை வேகப்படுத்துவது பற்றியும் அந்தப்பகுதி மக்களோடு சேர்ந்து ஆலோசித்தார். சூலூர் சட்டமன்ற உறுப்பினரும் தன்னுடைய பங்கிற்கு 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளாட்சித்துறை அமைச்சரை அழைத்து பணியை துவக்கி வைத்துள்ளார். அதற்கு பிறகு பொதுமக்கள் சார்பாக இயந்திரங்கள் இலவசமாக கொடுக்கப்பட்டு குளத்தை சுத்தம் செய்கின்ற பணிகள் வெகுவேகமாக நடந்தது.

வருடக்கணக்கில் வளர்ந்து கிடந்த சீமை கருவேலமரங்கள் வெகுவிரைவாக அகற்றப்பட்டன. 3 வாரத்திற்கு முன் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்துகொண்ட கூட்டத்திலேயே குளத்தை எங்கெங்கே எவ்வளவு ஆழம் இருக்கிறது என்று அளவீடு செய்து திட்டமிட்டு தூர்வாரலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. பொதுப்பணித்துறைதான் இந்த அளவீடுகளை செய்து தூர்வாருகின்ற பணியை மேற்பார்வையிட அதிகாரம் கொண்டது. ஆனால் கடந்த 3 வாரங்களாக பொதுமக்களால் திரும்பத்திரும்ப கோரிக்கை வைத்தபோதும் அளவீடு செய்யாமல் பொதுப்பணித்துறை இழுத்தடிக்கிறது. இந்நேரம் பொதுப்பணித்துறை ஒத்துழைப்பு கொடுத்து அளவீட்டை முடித்திருந்தால் தூர்வாருகின்ற பணி வேகமாக நடந்திருக்கும். எப்படியாவது இதை தாமதப்படுத்தி மழை வரும் வரை இழுத்துவிட வேண்டுமென்ற எண்ணத்தில் தமிழக அரசு செயல்படுவதாக அந்தப்பகுதி மக்கள் சந்தேகப்படுகிறார்கள். முதலமைச்சர் ஒருபுறம் மக்கள் இயக்கம் ஆரம்பித்து ஒரு சொட்டுநீரை கூட வீணாக்காமல் சேமிப்போம் என்கிறார்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் விளம்பர தூதராக வந்து மழைநீர் சேகரிப்பை பற்றி தமிழக மக்களுக்கு அறிவுரை சொல்கிறார். ஆனால் அரசு எந்திரமோ மக்களே களமிறங்கி மழைநீரை சேமிக்க முயற்சித்தாலும் ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறது. தமிழகம் முழுவதும் இதேநிலைதான் என்று கேள்விப்படுகிறோம். நீர் மேலாண்மைக்கு என்று தனித்துறையை ஏற்படுத்தி தனி அமைச்சரை நியமிக்க வேண்டும். கோவை ஆச்சான் குளம் தூர்வாருகின்ற பணிகளுக்கு மக்களோடு ஒத்துழைப்பு கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை ஏமாற்றும் வேலையை கைவிட வேண்டும்."என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.