Skip to main content

மன்னர் காளிங்கராயன் போல் முதல்வர் எடப்பாடி...! - புகழும் அதிமுக எம்.எல்.ஏ!

Published on 31/10/2020 | Edited on 31/10/2020

 

Chief Minister Edappadi like King Kalingarayan ...! MLA!

 

மத்திய அரசின் 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தின் கீழ் வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு வழங்க பெருந்துறை ஒன்றியத்திற்கு தமிழக அரசு ரூபாய் 12 கோடி ஒதுக்கியுள்ளது என பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

 

இன்று (31-10-2020) பெருந்துறையை அடுத்த வாவிகடை பகுதியில், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தினால் வீடுகளுக்குக் குடிநீர் வழங்கும் திட்டப் பணிகளை அவர் துவக்கி வைத்துப் பேசும்போது "முன்பெல்லாம் 10 வீடுகளுக்கு ஒரு குடிநீர் இணைப்பு வழங்கப்படும். ஆனால், தற்போது அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க அரசு திட்டமிட்டுச் செயல்படுகிறது.

மேலும், ஒரு தனி நபருக்கு ஒரு நாளைக்கு 45 லிட்டர் தண்ணீர் வழங்குவது என்பதை மாற்றி தற்போது 90 லிட்டர் வழங்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கும் மேலாக கூடுதல் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனது தொகுதியைப் பொறுத்தவரை குடிநீர்த் தட்டுப்பாடு உள்ள பகுதியாக முன்பு இருந்தது. இப்பொழுது அந்த நிலை மாறியுள்ளது. மேலும், அடுத்த 40 ஆண்டுகளுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக, நமது முதல்வர் தலைமையிலான அரசு, கொடிவேரியிலிருந்து பவானி ஆற்று நீரை 247 கோடி மதிப்பீட்டில் பெருந்துறை தொகுதி முழுவதும் வழங்கத் திட்டமிட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

Chief Minister Edappadi like King Kalingarayan ...! MLA!


இதேபோன்று ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் ரூ.5.40 கோடி மதிப்பில் ஊராட்சிக் கோட்டை குடிநீர்த் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. மாவட்ட ஆட்சியர் இரண்டு பணிகளையும் துரிதப்படுத்தியுள்ளார். வரும் டிசம்பருக்குள் கொடிவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் நிறைவடையும். இதனால், எப்போதுமே தண்ணீர் பஞ்சம் இல்லாத தொகுதியாகப் பெருந்துறை திகழும். ஈரோடு மாவட்டத்தில் மன்னர் காளிங்கராயன் இப்பகுதியில் வாழ்ந்தார். அவர் காலத்தில் காளிங்கராயன் கால்வாய் வெட்டி ஏராளமான நிலங்களுக்கு நீர் பாசன வசதி ஏற்படுத்தினார். தற்போது, நமது முதலமைச்சர் எடப்பாடியார் அதேபோன்று அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்காகக் கால்வாய்ப் பணிகளைத் துவக்கியுள்ளார். 

 

இதனால், ஏராளமான குளம் குட்டைகள் பவானி ஆற்று நீரால் நிரப்பப்படும். இந்த வாவிகடை பகுதிக்கும் இதனால் பலன் கிடைக்கும். பெருந்துறை பகுதியின் வறட்சி நீங்கும். இவ்வாறு வேகமாக, வளர்ச்சிப் பணிகளை, இந்த அரசு செயல்படுத்திவருகிறது. வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்தது என்றதும் நமது முதலமைச்சர் வட மாநிலங்களில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து ரூபாய் 45 கிலோ என்ற அளவில் விற்க ஏற்பாடு செய்துள்ளார். அந்த அளவிற்கு மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அ.தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது என்றார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.