complete lockdown coronavirus prevention chief minister discussion

ஊரடங்கு நீட்டிப்பு, கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்துவது ஆகியவை குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்களுடனும் அரசு உயரதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.

Advertisment

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுவரும் ஆலோசனையில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தமிழக காவல்துறை டி.ஜி.பி. திரிபாதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர், வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளின் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

Advertisment

அடுத்தக் கட்டமாக மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழு மற்றும் அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் குழுவுடன் ஆலோசிக்கும் முதல்வர், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஓரிரு தினங்களில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், கோவை உள்ளிட்ட கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.