Skip to main content

தொலைபேசி மூலம் ஆறுதல் சொன்ன முதல்வர்; நேரில் அஞ்சலி செலுத்திய ஐ.பெரியசாமி

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Chief Minister condoled over phone; I.Periyaswamy paid tribute in person

 

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள்(95) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தேனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பல்வேறு தரப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் ஓபிஎஸ்-இன் வீட்டிற்குச் சென்ற அமைச்சர் ஐ.பெரியசாமி ஓபிஎஸ் தாயாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு ஓபிஎஸ்க்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஐ.பெரியசாமி, ''ஓபிஎஸ் அவர்களுடைய தாயார் 95வது வயதில் காலமானது அறிந்து தமிழக முதல்வர் திமுகவின் சார்பாக, மாவட்ட கழகத்தின் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார். இங்கு நேரடியாக வந்து மலர்வளையம் வைத்து திமுக சார்பில் எங்களது ஆழ்ந்த அஞ்சலி செலுத்தியுள்ளோம். அவருடைய இழப்பால் இன்றைக்கு மிகவும் வருத்தத்தில் உள்ள ஓபிஎஸ்க்கும் அவரது குடும்பத்தாருக்கும் நாங்கள் ஆறுதல் வழங்கி வந்திருக்கிறோம்'' என்றார்.

 

முன்னதாக ஓபிஎஸ்-ன் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாகவும் ஓபிஎஸ்ஸிடம் ஆறுதல் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்