Chief Constable jailed for two years for accepting Rs 1,000 bribe

1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

விருதுநகர் மாவட்டம், சிவகாசி நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிப்புரிந்து வரும் கோவிந்தராஜ், கடந்த 2008- ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். அப்போது வழக்கு தொடர்பாக, காவல் நிலையத்திற்கு வந்த சீனிவாசன் என்பவரிடம் கோவிந்தராஜ் 1,000 ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார்.

Advertisment

இது தொடர்பான வழக்கு விசாரணை ஸ்ரீ வில்லிப்புத்தூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபணமானதால், லஞ்சம் வாங்கி தலைமைக் காவலருக்கு சுமார் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூபாய் 10,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.