Skip to main content

சிதம்பரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்கள் திறப்பு சென்னை உயர்நீதிமன்ற தலைமை  நீதிபதி திறந்து வைத்தார்

Published on 03/02/2019 | Edited on 03/02/2019

 

  

c

 

 சிதம்பரம் அருகே சி.முட்லூரில் கட்டப்பட்டுள்ள சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்கள் மற்றும் நீதிபதிகளின் குடியிருப்புகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ் ,ஜெயச்சந்திரன், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைதுறை அமைச்சர் சி.வி.சண்முகம், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய கமலேஷ் தகில்ரமணி  ஞாயிறன்று திறந்து வைத்தார்.

 

இதனைதொடர்ந்து நீதிமன்ற திறப்பு நிகழ்ச்சிகள் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடந்தது.    இவ்விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய கமலேஷ் தகில்ரமணி பேசியதாவது:  கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நகரில் நடராஜர் திருக்கோயில்கள் போல் மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள் உள்ளன. சிதம்பரம் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் திறப்பு விழாவில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்த ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் சுமார் ரூ.24.16 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

 

கடலூர் மாவட்ட நீதிமன்றம் 150 ஆண்டுகாலமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கான விழாவினை சென்னை உயர்நீதிமன்றத்தின் சார்பில் மிகச் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்படும். சிதம்பரத்தில் சார்பு நீதிமன்றம் ஒன்று உள்ளது. மேலும் கூடுலாக ஒரு சார்பு நீதிமன்றம் அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.புதிதாக அமைக்கப்படவுள்ள நீதிமன்றங்களில் சி.சி.டி.வி கேமரா, பாதுகாப்பு உபகரணங்கள் அமைய உள்ளன. நீதிமன்றங்கள் மூலம் பொதுமக்களுக்கு உடனடியாக நீதி வழங்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு புதிய நீதிமன்றகளையும், நீதிமன்ற கட்டிடங்களையும் மற்றும் நீதிமன்றங்களுக்கான பிற வசதிகளையும் அரசு ஏற்படுத்தி கொடுப்பதின் நோக்கம் பொதுமக்களுக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் என்று பேசினார்.

 

 சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலை துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  பேசுகையில்,  அரசு 2011 முதல் கடந்த 7 வருடங்களில் 41 இடங்களில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்கள் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்ட ரூ.527.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளது.

நீதித்துறை சுதந்திரமாக செயல்படவும், மக்களுக்கு விரைந்து நீதி கிடைக்கவும் தேவையான அனைத்து இடங்களிலும் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றார் . இதனை தொடர்ந்து தமிழக தொழில் துறை அமைச்சர் சம்பத் பேசினார்.

 

c

 

முன்னதாக பொதுப்பணித்துறையின் மேற்பார்வை பொறியாளர் ராஜவேல் திட்ட அறிக்கை வாசித்தார்.  முன்னதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய கமலேஷ் தகில்ரமணி  கல்வெட்டினை திறந்து வைத்தார்.  இவ்விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி வரவேற்று பேசினார்.

 

இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன்,சிதம்பரம் எம்பி சந்திரகாசி, பாண்டியன் எம்எல்ஏ, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சுந்தரம்,சிதம்பரம் வழக்கறிஞர் சங்கத்தலைவர் கோபாலகிருஷ்ணன்,சிதம்பரம் பார் அசோசியேஷன் தலைவர் கிரி, பொதுப்பணித்துறை கடலூர் செயற்பொறியாளர் தனபால், சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ் உள்ளிடட வழக்கறிஞர்கள், நீதிதிகள், நீதி மன்ற ஊழியர்கள் கலந்துகொண்டனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.

Next Story

நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு; பொன்முடி வழியில் ஐ.பெரியசாமி

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
order from judge in I.Periyaswamy case; its going on Ponmudi way

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தண்டனை மேல்முறையீட்டு வழக்கில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர் அமைச்சர் பதவியை பெரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டுவசதி துறையில் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்படுவதாக அளிக்கப்பட்ட தீர்ப்பை அடுத்து, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கையை ஐ.பெரியசாமி தரப்பு எடுத்துள்ளது.

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி அதிகாரத்தை பயன்படுத்தி அன்றைய முதல்வர் கலைஞரின் பாதுகாவலர் ஒருவருக்கு வீடு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐ.பெரியசாமி தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுவித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை மறு விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

 I.Periyaswamy on Ponmudi way

இந்த வழக்கினுடைய விசாரணை கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அண்மையில் இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அந்த தீர்ப்பில், 'சிறப்பு நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் வழக்கு சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். முறையாக ஒப்புதல் பெற்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும்' என உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

மேலும், மார்ச் 28ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய் பிணை செலுத்த வேண்டும் எனவும் ஐ.பெரியசாமிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, இந்த விசாரணையை சிறப்பு நீதிமன்றம் 2024 ஜூலை மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் கொடுத்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.