Advertisment

சிதம்பரத்தில் மனித சங்கிலி போராட்டம்

சிதம்பரத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் புவனகிரி திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன், சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் நகர் பெரியசாமி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயலாளர் முடி வண்ணன், மதிமுக மாவட்ட செயலாளர் குணசேகரன், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் இளங்கோவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அறவாழி, மீத்தேன் திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், காவிரி டெல்டா கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக அமைப்புகள் கலந்து கொண்டு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதேபோல் பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட சி.முட்லூரில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

Advertisment

c

c

Chidambaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe