Advertisment

பானைச்சின்னத்திற்கு வாக்குகேட்டு திருமா தீவிர பிரச்சாரம்

சிதம்பரம் மக்களவை தொகுதிக்கு திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் தொல். திருமாவளவன் பானைச்சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வியாழக்கிழமையன்று காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்கள், மற்றும் சோழதரம், பாளைங்கோட்டை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

Advertisment

t

வேட்பாளரை ஒவ்வொரு கிராமத்தின் முகப்பிலும் பொதுமக்கள் ஒன்றுகூடி மேளதாள முழங்க வெடிவெடித்து மாலை அனிவித்து வரவேற்றனர். பொதுமக்கள் அனைவரும் எங்களின் வாக்கு பானைச்சின்னத்திற்கு என்று பெருத்த கரகோஷம் எழுப்பியவாறு நம்பிக்கையுடன் உறுதியளிக்கிறார்கள். பிரச்சார வாகனத்தில் இருந்தவாறு கூடியிருக்கும் மக்களிடம் பேசிய திருமா தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலும், மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் ஆட்சி அமைய தமிழகத்தில் திமுக தலையிலான 40 தொகுதிகளிலும் வெற்றிபெற அனைத்து மக்களும் ஒருசேர வாக்களிக்கவேண்டும்.

Advertisment

t

சிதம்பரம் தொகுதியின் அனைத்து பிரச்சனைகளையும் மக்களவையில் ஒலிக்க பானை சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். இவருடன் திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், மதிமுக மாவட்ட செயலாளர் குணசேகரன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ், காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

election speech Thirumavalavan vck Chidambaram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe