Skip to main content

காந்தியை கீழ்த்தரமாக சித்தரித்த சனாதனவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன் 

Published on 31/01/2019 | Edited on 31/01/2019
t

 

சிதம்பரத்தில் சுவாமி  சகஜானந்தா சமூக பேரவை சார்பில் சுவாமி சகஜானந்தா அடிகளாரின் 129-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.   விழாவிற்கு பேரவையின் காப்பாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் தலைமையேற்று பேசுகையில்,  ‘’ புரட்சியாளர்களுக்கும், சமூக சீர்திருத்தவாதிகளின் பிறந்தநாளை ஒரு குறிப்பிட்ட தேதியில் கொண்டாடுவது மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் கொண்டாடலாம்.


கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பே ஏழை எளிய மக்கள் கல்வியால் மட்டுமே முன்னேற முடியும் என்ற உயரிய நோக்கில் கல்வி நிறுவனங்களை நிறுவிய  சகஜானந்தா ஆன்மீகத்தையும் கல்வியும் இருவிழிகளாக எடுத்து செயல்பட்டுள்ளார்.


அதே காலகட்டத்தில் 17 ஆண்டுகள் சட்ட மேலவை உறுப்பினராகவும், 12 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.  சகஜானந்தா பின்பற்றியே ஆன்மிகம் சாதி, மதம் கடந்துள்ளது இதனை வரவேற்கிறோம். இதே ஆன்மீகத்தை வைத்துக்கொண்டு மனிதர்களிடம்  பிற்போக்குத்தனமான தகவல்களை கூறி சாதிய முரண்பாடுகளை வளர்ப்பதை எதிர்க்கிறோம்.


அம்பேத்கர் படித்துக் கொண்டிருக்கும் காலத்திலேயே ஏழைகளுக்கு கல்வி நிறுவனங்களை நிறுவிய சகஜானந்தா கல்வியை வளர்க்கவே ஆன்மீகத்தை பயன்படுத்தியுள்ளார்.

 

th


ஆன்மிகம் என்பது மற்றவர்களின் உணர்வு, நட்பு, உறவுகளை மதிப்பதே ஆகும். திருநீறு பூசிக்கொண்டு பூணூல் அணிந்து கொண்டு ஜாதி ஒழிப்புக்கு குரல் கொடுத்தாள் மோடியாகவும், ராஜாவாகவும் இருந்தாலும் வரவேற்போம். சமத்துவம் மலர செய்யும் ஆன்மிகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் எதிர்த்ததில்லை.  சகஜானந்தரின் கொள்கைகளை நாடு முழுவதும் எடுத்துச் செல்ல இந்நாளில் உறுதி ஏற்போம்.  அவரது பிறந்தநாளை தமிழக அரசு அரசு விழாவாக அறிவித்து கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும். காந்தி நினைவு நாளில் உத்திரப்பிரதேசத்தில் இந்து மகாசபை தலைவர் பூஜாவின் சகுன் பாண்டே காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடும் சம்பவம் மிகவும் கொடிய விஷ தன்மை உடையது. சனாதன சக்திகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். சனாதன வாதிகளின்  புகலிடமாக  இந்து மகாசபை உள்ளது. இது வன்மையாக கன்டிக்கதக்கது. காந்தியை கீழ்தரமாக சித்தரித்து அவரை சுட்டுக்கொன்ற கோட்சே வாழ்க என்று கோஷமிட்ட அவர்கள் மீது மத்திய அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

 

விழாவில் நந்தனார்  கல்விக் கழகத்தின் தலைவர்  சங்கரன் சகஜானந்தா சமூக பேரவையின் தலைவர் நீதி வளவன் செயலாளர் பாலா துணைத்தலைவர் திருவரசு துணை செயலாளர் ஆதிமூலம் பொருளாளர்  மணவாளன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

 

முன்னதாக சகஜானந்தா தோற்றுவித்த நந்தனார் பள்ளிகளில் கல்வி பயின்று அரசு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்று மற்றும் தங்கப்பதக்கத்தை திருமாவளவன் வழங்கினார். மேலும் சகஜானந்தா மணி மண்டபத்தில் இருந்து பள்ளியில் படித்த முன்னாள் மாணவ மாணவிகள் முளைப்பாலிகளை தலையில் சுமந்து கொண்டு  மேளதாள முழங்க அவர் வாழ்ந்த இடமான ஓமகுளத்திற்கு பேரணியாக வந்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சின்னத்தை முடக்க முயற்சிப்பது மோடியின் மோடி மஸ்தான் வேலை” - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister MRK Panneerselvam criticized BJP

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி இந்தியா கூட்டணியின் சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா ஆகியோரை ஆதரித்து சிதம்பரத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இதற்காக சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள லால்புரம் என்ற இடத்தில் பிரம்மாண்ட மேடை மற்றும் பொதுக்கூட்ட பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வியாழக்கிழமை(28.4.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுக்கூட்ட மேடை அமைய உள்ள இடத்திற்கு வந்த அமைச்சர் பன்னீர்செல்வம், மேடை அமைந்துள்ள பகுதி, தொண்டர்கள் அமர உள்ள இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது மேடை அமைக்கும் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சிதம்பரம் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல். திருமாவளவன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர் உள்ளிட்டோரை ஆதரித்து சிதம்பரத்தை அடுத்த புவனகிரி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட லால்புரம் பகுதியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதில் வாக்காளர்கள், பொதுமக்கள், தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். மாநாடு போன்று இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.

முதலமைச்சர் நேரடியாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். 3 ஆண்டு காலத்தில் செய்துள்ள சாதனைகள், பணிகள் குறித்து முதல்வர் பேசி வருகிறார். சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 75 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். முந்தைய தேர்தலில் எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்களைச் சந்தித்து வாக்கு கேட்டு 39 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த ஆட்சியில் தனி நபர்கள் பண பலன்களைப் பெற்றுள்ளனர். ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை நேரடியாகச் செல்கிறது. மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்கள் எந்த உலகத்திலும் இல்லை. பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு உதவித்தொகை என அனைத்து உதவிகளும் நேரடியாக பயனாளிகளுக்குச் செல்கிறது.

திமுக கூட்டணி கொள்கை உள்ள கூட்டணி. இந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. இது 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்கும் சின்னங்களை முடக்குவதன் மூலமாக அவர்களது வெற்றியை தடுக்க முயற்சிக்கின்றனர். இது மோடியின் மோடி மஸ்தான் வேலை. இது எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு செய்கின்ற வேலை. இந்த ஆட்சி இ.டி., சி.பி.ஐ போன்றவற்றை வைத்துக் கொண்டு ஆட்சி புரிகின்றார்கள். ஆனால் தமிழக முதலமைச்சர் மக்கள் நலத்திட்டங்களை செய்து விட்டு, அதை முன்னெடுத்து பிரச்சாரம் செய்து வருகிறார். மக்கள் சக்தியாக ஒன்று திரண்டு வெற்றி பெறச் செய்வார்கள். 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலியை உயர்த்தியது அவரது பயத்தை காட்டுகிறது. இவற்றையெல்லாம் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள். திரண்டு வந்து திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்” எனக் கூறினார்.

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.