var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
தஞ்சையில் அய்யன் திருவள்ளுவர் சிலையை அவமதித்ததை கண்டித்து சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செய்திதொடர்பாளர் திருவரசு, நகரசெயலாளர் ஆதிமூலம், இன்பவளவன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலை அவமதிப்பை கண்டித்து கோசங்களை எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து அதே இடத்தில் ஐந்து நிமிடம் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வந்த காவல்துறையினர் அனைவரையும் கலைந்து போக செய்தனர்.