Skip to main content

சிதம்பரம் நடராஜர் கோவில் மேல்தளத்தில் மதுபாட்டில்... கும்பாபிஷேகத்துக்கு வந்த பக்தர்கள் முகம் சுளிப்பு...!

Published on 07/02/2020 | Edited on 07/02/2020

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் உலக புகழ் பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு உலக நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சுற்றுலா பயணிகள் என அனைத்து தரப்பினரும் வந்து செல்கிறார்கள். இது பஞ்சபூத தளங்களில் ஆகய தளமாகவும் விளங்குகிறது. சிவனை கருவறையில் உருவ வழிபாட்டுடன் வழிபடுவதால்  சிவ பக்தர்களும் சைவர்களும் அதிகளவில் இந்த கோவிலுக்கு வந்து செல்கிறார்கள். இப்படி புகழ்மிக்க கோவிலின் வளாகத்தில்  நடராஜர் சன்னதிக்கு அருகில் ஈசான மூலையில் ஸ்ரீஆதிமூலநாதருக்கு தனிக் கோவில் உள்ளது.

 

Chidambaram  nataraja temple issue

 



இந்த கோவிலுக்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது.  இதனை காண பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோவிலுக்கு ஆயிரகணக்கில் வந்தனர். பின்னர் கோவிலின் மேல்தளத்திற்கு குடமுழக்கை பார்க்க தற்காலிக படிகள் அமைத்து அனுமதிக்கப்பட்டனர்.  குடமுழுக்கை பார்த்து வழிபட்ட பக்தர்கள் சிலர் கோவிலின் மீது இதுபோன்ற காலங்களில் தான் நம்மால் ஏறிபார்த்து ரசிக்கமுடியும் மற்ற நேரங்களில் இதனை பார்க்க முடியாது என்று என்னி கோவிலின் மேல் தளத்தை சுற்றிப் பார்த்து சுய படத்தையும், தங்கபொற்கூறை அருகே நின்று படம் எடுத்து மகிழ்ந்து கொண்டனர்.

அப்போது சிலர் கோவிலின் மேல் தளத்தை சுற்றிப்பார்த்தபோது, அங்கு மதுபாட்டிலை கிடப்பதைக் கண்டு முகம் சுளித்தனர். இதுகுறித்து அவர்கள் இந்த இடம் மிகவும் பாதுகாப்பானது. தீட்சிதர்கள் அனுமதி இல்லாமல் மேல் தளத்தில் ஏறமுடியாது. இரவில் கூட அர்தஜாம பூஜைகள் முடிந்து அனைத்து இடங்களையும் தீட்சிதர்கள் சுற்றி வந்து அனைவரையும் வெளியேற்றிவிட்டு இரவில் கோவிலுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள். உலக மக்கள் போற்றி வணங்கும் சிவனின் மேல்தளத்தில் இப்படி கிடப்பது. வருத்தமாக உள்ளது என்று வேதனையை தெரிவித்தனர். மேலும் இங்க என்ன நடக்கிறது என்ற கேள்வியும் எழுப்பினார்கள்.

தீட்சிதர்கள் தரப்போ இது எப்படி வந்தது என்று தெரியவில்லை. விழா காலங்களில் கோவிலின் மேல்தளத்தில் வேலை செய்ய செல்பவர்களின் கெட்ட செயலாக கூட இருக்கும். எங்கு தவறு நடந்துள்ளது என்று விசாரணை செய்கிறோம் என்றார். இந்த செயல் எங்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது என்று கூறுகிறார்கள்.  

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உழவாரப் பணிகள் குறித்து ஆய்வு

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
 study on tillage work at Chidambaram Natarajar temple

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன் தலைமையில் கோட்ட பொறியாளர் அசோகன் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் செந்தில்வேலன், மண்டல ஸ்தபதி, கோயில்கள் ஆய்வாளர் உள்ளிட்டவர்கள் அடங்கிய கோயில் உழவாரப் பணிகள் குறித்த நிலையான ஆய்வுக் குழுவினர் கோயிலில் பல்வேறு இடங்களில் கோயில் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது. சுத்தமாக உள்ளதா? என்பது குறித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இவர்கள் தெற்கு கோபுர வாயில், மேல கோபுர வாயில், கோயில் உட்பிரகாரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். இது குறித்து இணை ஆணையர் பரணிதரன், கோயில்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பது குறித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆய்வு செய்ததாகவும் இது குறித்த தகவலையும் நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கோவில்களில் வெளி பிரகாரங்களில் கழிவு நீர் வெளியேறி துர்நாற்றம் வீசுவதையும், தெற்கு வீதி, கீழ வீதி கோபுரம் அருகில் மாட்டு தொழுவம் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு மாட்டு சாணிகள் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் துர்நாற்றம் தாங்காமல் அவதிப்படுவதாக உழவார பணிகள் ஆய்வுக் குழுவினரிடம் தெரிவித்தனர். இந்த கருத்தை ஏற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறினார்கள்.

முன்னதாக ஆய்வுக் குழுவினர் கோயிலுக்கு உள்ளே வரும்போது இது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் இந்து அறநிலையத்துறைக்கும் கோயிலுக்கும் சம்பந்தம் இல்லை. இங்கு உழவார பணிகள் குறித்து ஆய்வு செய்வது கண்டிக்கத்தக்கது. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறோம். இது உள்நோக்கம் கொண்டது என கோயில் தீட்சிதர்களின் செயலாளர் ஆய்வு குழுவினரிடம் கடிதம் அளித்துள்ளார். கோயிலில் உழவார பணிகள் குறித்து ஆய்வு செய்தது கோயிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

‘சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்க’ - உயர்நீதிமன்றம் உத்தரவு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Nataraja Temple administration to submit income and expenditure account  orders High Court

சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் சிதம்பரம் நடராஜர் கோவிலின் நான்கு கோபுரங்கள் அமைந்துள்ள பகுதியிலும், கோவிலின் முதல் மற்றும் இரண்டாவது பிரகாரங்களிலும் எந்த அனுமதியுமின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதற்குத் தடை விதிக்கக் கோரியும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அறநிலையத்துறையின் மனுவில், பழமையான கோவில்களில் எந்த அனுமதியும் பெறாமல் கட்டுமானங்களை மேற்கொள்ளக்கூடாது என உயர்நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளபோதும், அதை மீறி ஆறு அடிக்கு மேல் தோண்டப்பட்டுள்ளதாகவும், எந்த மாதிரியான பணிகள் நடக்கின்றன என்பதே தெரியவில்லை எனவும், கோவிலுக்குள் இருந்த நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர். மகாதேவன், பி.டி. ஆதிகேசவலு அமர்வின் முன்பாக நடைபெற்று வந்தது. பொது தீட்சிதர்கள் குழு தரப்பில் கடைகளோ அன்னதான கூடமோ கட்டவில்லை என்றும், தற்காலிக அமைப்பில் அலுவலகம் தான் செயல்படுகிறது என விளக்கம் அளித்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, புராதனமிக்க எந்த கோவிலிலும் அனுமதியின்றி எவரும் கை வைக்க நீதிமன்றம் அனுமதிக்காது என்றும், கோவில்கள் பக்தர்களுக்கானது மட்டுமே என்றும், வேறு நோக்கத்தில் யாரும் கை வைத்தால் அவர்களை இந்த நீதிமன்றம் தடுக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்தது உயர்நீதிமன்றம்.

இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம், ஆருத்ரா தரிசன அறக்கட்டளை ஆகியவற்றின் கடந்த 3 ஆண்டு வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தீட்சிதர்கள் சபைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.