Skip to main content

சிதம்பரம் நடராஜர் கோவிலில் குடமுழுக்கு கோலாகலம்!

Published on 05/02/2020 | Edited on 05/02/2020

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் உலகப் புகழ் பெற்றது. இது பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குகிறது. அதுமட்டும் இல்லாமல் அனைத்து சிவதளங்களிலும் கருவறையில் லிங்க வடிவத்தில் காட்சி தரும் சிவபெருமான் இங்க மட்டும் தான் உருவ தோற்றத்துடன் காட்சி அளிக்கிறார். இதனால் உலகத்தில் உள்ள சைவர்கள் அனைவரும் இந்த கோவிலுக்கு ஆண்டுக்கு ஒருமுறையாவது வந்து செல்வது வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இப்படி புகழ் மிக்க நடராஜருக்கு மூலநாதராக உள்ள ஸ்ரீஆதிமூலநாதர் சன்னதி கோவிலின் ஈசான மூலையில் அமைந்துள்ளது.
 

இந்தக் கோவில் தோன்றிய கதை குறித்து சிலர் கூறுகையில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தில்லை மரங்கள் அடர்ந்த தில்லை வனமாக இருந்தது. இந்த தில்லை என்ற பெயர் நாளடைவில் மருவி சிதம்பரம் என்று மாறியுள்ளது. இப்போதும் சிலர் சிதம்பரத்தை தில்லை என்றே கூறுவார்கள். இப்படியுள்ள தில்லை வனத்தில் சுயம்புவாக ஜோதி ஸ்வரூபமாக ஸ்ரீஆதிமூலநாதர் எழுந்தருளினார் என கூறப்படுகிறது.

chidambaram nadarajar temple festival peoples

மேலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீவைகுண்டத்தில் திருப்பாற்கடலில் ஆயிரம் சிரசுடைய ஆதிசேஷன் ஸ்ரீ மஹாவிஷ்ணுவை தினமும் சுமந்து வர ஒருநாள் சாமி மிகவும் பாரமாய் இருப்பதை ஆதிசேஷன் உணர்ந்து அதற்கான காரணத்தை வினவ அப்போது ஸ்ரீ மகாவிஷ்ணு தான் தாருகா வனத்தில் மோகினியாய் அவதரித்து ஸ்ரீ நடராஜரின் ஆனந்த தாண்டவ காட்சியை கண் குளிர கண்டதை நினைத்து உடல் சிலிர்த்தமையால் பாரமாக உணர்ந்தாய் என்றார். அதற்கு ஆதிசேஷன் மகாவிஷ்ணுவை நோக்கி தங்களுக்கு ஆனந்தத்தை அருளிய அந்த ஆனந்த நடனக் காட்சியை தானும் காண வரம் கேட்க விஷ்ணுவும் வரம் அருளியுள்ளார்.  

 

இதனைதொடர்ந்து பூலோக கைலாயம் என்னும் தில்லை வனத்தில் அருளும் ஸ்ரீ மூலநாதரை பூஜைகள் செய்ய பணித்துள்ளார். ஆதிசேஷன் ஸ்ரீ பதஞ்சலி முனிவராய் அவதரித்து தில்லையின் மேற்கு திசையில் பகுதியில் ஸீஷம ரூபத்தில் பிலாத்வார  வழியாக ஸ்ரீ ஆனந்தி ஸ்வரர் கோயிலுக்கு வந்து ஸ்ரீ மூலநாத புலியின் பாதம் கொண்ட ஸ்ரீ வியாக்ரபாத முனிவர் உடன் ஆதிமூலநாதரை பக்தி சிரத்தையுடன் பலகாலம் பூஜித்து வர அகமகிழ்ந்த ஸ்ரீ மூலநாதர் அம் முனிவர்களிடம் என்ன வரம் வேண்டும் என வினவ முனிவர்கள் அம்பிகையோடு ஆடிடும் ஆனந்த தாண்டவ காட்சியை காண வரமாக கேட்டனர். அதன்படியே ஆனந்த நடராஜமூர்த்தி தை மாதம் பூசம் நட்சத்திரம், குருவாரம் பௌர்ணமி இணைந்த நன்னாளில் திருகைலாயத்திலிருந்து தில்லைவனத்திற்கு ரத்தினங்கள் பதித்த ரதத்தில் வந்திறங்கி அனைவருக்கும் ஆனந்த நடனக் காட்சி தந்தருளினார் என்று ஐதீக கதையைக் கூறுகிறார்கள்.

chidambaram nadarajar temple festival peoples

மேலும் பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்கள் தாங்கள் கண்ட ஆனந்த நடன காட்சியை உலகம் உய்ய அனைவரும் தரிசிக்க நித்தமும் நடனக்காட்சி அருள வேண்டுமென வேண்ட அதன்படியே வரம் அளிக்கிறார் நடராஜர் என்று கூறப்படுகிறது. பின்னர் அனுதினமும் பஞ்ச கிருத்திய பரமானந்த தாண்டவத்தை புரிந்தருளுகின்றார். மேலும் பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்கள் கௌடதேச மன்னன் சிம்மவர்மனுக்கு பெருநோய் தீர தில்லைத் தலத்தின் தீர்த்தமாகிய சிவகங்கையில் நீராடி மூர்த்தியாய் விளங்கும் ஸ்ரீ மூலநாதரை வழிபட்டால் நோய் தீரும் என்று அழைக்க அம்மன்னன் தினமும் சிவகங்கையில் நீராடி ஸ்ரீ மூலநாதரை வழிபட்டு வந்தமையால் பெரு நோய் நீங்கி பொன்நிறம் உடல் பெற்றமையால் ஹிரண்யவர்மன் என பெயர் பெற்றதாக கூறுகிறார்கள். மேலும் அம்மன்னன் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு பொற்கூரை வேய்ந்து ஸ்ரீ மூலநாதர் இருக்கு அழகிய கோயிலும் கட்டி அகமகிழ்ந்தார்.


வேண்டும் வரங்களை உடனடியாக வழங்கும் ஸ்ரீ உமயபார்வதி ஸமேத ஸ்ரீ மூலநாதரை சோமவாரத்தில் (திங்கள்கிழமை) சுயம்வரா காலபார்வதி ஜபம் செய்து மாலை சாற்றி வழிபட்டால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம் என்பதையும் குறிப்பிடுகிறார்கள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பிப்ரவரி 5- ஆம் தேதி காலை 10.00 மணியளவில் குடமுழுக்கு நடைபெற்றது. இதனை காண வெளி மாநிலங்களில் இருந்தும் உலக நாடுகளில் உள்ள சிவ பக்தர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அனைவரும் குழுக்கு விழாவை கண்டுகளித்தனர். 

chidambaram nadarajar temple festival peoples

நடராஜருக்கே மூலநாதர் என்பதால் 33- யாக குண்டங்கள் வைத்து கடந்த 1ம் தேதி முதல் ஏகம் செய்யப்பட்டது. கடந்த கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடராஜருக்கு நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் கூட இவ்வளவு குண்டம் வைக்கவில்லை என்பத குறிப்பிடதக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சேற்றில் குளித்து சிலம்பம் சுற்றி வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன்.. வியக்க வைக்கும் திருவிழா!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
An festival on Bathing in the mud and going around the Silambam to worship the Goddess in pudukkottai

தமிழர்களின் ஒவ்வொரு திருவிழாக்களும் அர்த்தமுள்ளதாகவே இருக்கும். கோடை வெயிலின் வெக்கையை சமாளிக்க திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. அதே போல விதை நேர்த்தி செய்ய முளைப்பாரித் திருவிழாக்கள், காடுகள், வனங்களை பாதுகாக்க வன கடவுள்களை வணங்கினார்கள். இப்படி அத்தனை விழாக்களும் அர்த்தமுள்ள விழாக்களாக தமிழர்கள் கொண்டாடி வந்தனர். இப்படி ஒரு திருவிழா தான் தமிழக மக்களையே திரும்பிப் பார்க்க வைக்கும் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் நாடு செலுத்தும் திருவிழா.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகில் உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாக்கள் பல நாட்கள் நடக்கும். தீ மிதி, பால்குடம், காவடி என ஒவ்வொரு நாளும் அம்மன் வீதி உலா ஊர்வலத்திற்கு முன்பு ஆண்கள், பெண்கள் ஆயிரக்கணக்கானோர் தீ பந்தங்கள் தூக்கிச் செல்ல பெண்களின் கும்மியாட்டத்தோடு வீதி உலா நடக்கும். ஒவ்வொரு நிகழ்வுடன் கலை நிகழ்ச்சிகளும் நடக்கும்.பொங்கல் நாளில் சுமார் 100 கிராம மக்கள் தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்து படையலிட்டு உறவினர்களை எல்லாம் அழைத்து விருந்து படைப்பார்கள். திருவிழாவின் கடைசி நாளில் தான் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அம்மனை வணங்கி ‘நாடு செலுத்தி’ செல்லும் நிகழ்வு தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் திருவிழாவாக அமையும்.

பொன்னமராவதி நாடு, செவலூர் நாடு, ஆலவயல் நாடு, செய்பூதி நாடு என 4 நாடுகளுக்கு கீழ் 100 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உண்டு. இந்த திருவிழாவில் ஜாதி பாகுபாடு பறந்துவிடும். ஒவ்வொரு நாட்டில் இருந்து கிராம மக்கள் திரளாக ஊர்வலமாக வந்து அம்மனை வணங்கிச் செல்வர். சிலர் குதிரையில் ஏறிவந்து செல்வர். அதே திருவிழாவில் ஆலவயல்நாடு ‘நாடு செலுத்தும்’ நிகழ்ச்சி ரொம்பவே வித்தியாசமானதாக உள்ளது. இந்த திருவிழாவில் பங்கேற்றும் பக்தர்கள் ஒரு நாள் பழந்தமிழனாகவே மாறிவிடுகிறார்கள். பலரும் கடவுளிடன் தங்கள் வேண்டுதலை முன்வைத்து நினைத்த காரியம் முடிந்தால் இதை செய்கிறேன் என்று வேண்டுவது வழக்கம். ஆனால் இங்கு நான் சேற்றில் குளித்து வந்து தரிசனம் செய்கிறேன் என்று நேர்த்திக்கடன் வைத்திருப்பார்கள்.

An festival on Bathing in the mud and going around the Silambam to worship the Goddess in pudukkottai

நாடு செலுத்தும் முதல் நாளில் ஒரு கண்மாயில் தண்ணீர் விட்டு நன்றாக சேற்றை குழப்பி வைத்துவிடுகிறார்கள். நாடு செலுத்தும் நாளில் நேர்த்திக்கடன் உள்ள பக்தர்கள், சிறுவர்கள் நன்றாக குழப்பிய சேற்றில் குளித்து உடல் முழுவதும் சேற்றை பூசிக் கொண்டு தலையில் பறவைகளிக் இறகுகள், உடலில் பஞ்சுகள் ஒட்டிக் கொண்டு கைகளில் வேல் கம்புகளுடன் சிலம்பமாடி வருவதை காணவே பல ஆயிரம் மக்கள் திரண்டு நிற்கிறார்கள். இவர்களுக்கு முன்னால் ஆலவயல் நாட்டார் பதாகையுடன் செல்ல பின்னால் செல்லும் அனைவரும் சிலம்பத்துடன் செல்கின்றனர். அலங்கரிக்கப்பட்ட முகூர்த்தக்கால்கள், வேல்கம்புளும், கும்மியும் காணப்படுகிறது. கோயிலலைச் சுற்றி வந்து உள்ளே சென்று வணங்கி செல்கின்றனர்.

An festival on Bathing in the mud and going around the Silambam to worship the Goddess in pudukkottai

இது குறித்து, அங்குள்ள இளைஞர்கள் கூறும் போது, “திருவிழாக்கள் நம் முன்னோர்களால் பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில் எந்த ஜாதி பாகுபாடும் பார்ப்பதில்லை. அனைத்து ஜாதியினரும் கலந்து கொள்வதுடன் தங்கள் உறவினர்களையும் அழைத்து வருவார்கள். அப்படித்தான் நாடு செலுத்துதல் விழாவும். நேர்த்திக்கடன் செலுத்த சேற்றை அள்ளிப் பூசிக் கொண்டு போவார்கள். பார்க்க பழங்குடிகளாகவே தெரியும். சேற்றில் குளித்தால் உடலில் தோல் நோய்கள் பறந்து போகும். அதனால் தான் நம்முன்னோர்கள் கோடையில் வரும் தோல் நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள சேற்றுக் குளியல் திருவிழாவில் கலந்து கொண்டனர். சுமார் 5 மணி நேரம் வரை அந்த சேரு நம் உடலில் இருப்பதால் நம் உடம்பில் உள்ள தோல் நோய்கள் பறந்து போகிறது. அந்த மருத்துவத்தை திருவிழாவாக செய்வதால் ஏராளமானோர் வந்து கலந்து கொள்கிறார்கள். இன்றும் பல மேலை நாடுகளில் இந்த சேற்றுக் குளியலை பணத்திற்காக மருத்துவமனைகளில் செய்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கில் பணமும் வசூல் செய்கிறார்கள். ஆனால் நாங்கள் திருவிழாவாக செய்கிறோம்” என்றனர்.