Skip to main content

டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்; நகர்மன்ற தலைவர் மழுப்பல்

Published on 22/02/2023 | Edited on 22/02/2023

 

chidambaram municipality meeting councillor request 

 

சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு நகராட்சி துணைத்தலைவர் முத்துகுமரன், ஆணையர் அஜிதா பர்வீன், பொறியாளர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் பேசியது, "நகர்மன்றம் பொறுப்பேற்று ஓராண்டாகிறது. ஓராண்டில் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிதம்பரம் நகராட்சியில் புதிய காய்கறி அங்காடி, புதிய பேருந்து நிலையம், புதிய நூலகக் கட்டிடம், 2 கோடி ரூபாய் செலவில் அறிவுசார் மையம், நவீன மின் மயானம், பூங்காக்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. மேலும் 143 கோடியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் நகரில் உள்ள 33 வார்டுகளிலும் புதிய குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு தூய குடிநீர் வழங்கும் திட்டம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இவையல்லாமல் சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி குடிநீர் தேக்கம் சீரமைக்கப்படுகிறது. நகரம் முழுவதும் 3 கோடி ரூபாய் செலவில் எல்.இ.டி மின்விளக்குகள் பொருத்தப்படவுள்ளது. நகரில் உள்ள அனைத்து குளங்களையும் தூர்வாரி கரைகளை சீரமைத்து நடைபாதை அமைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவையல்லாமல் நகராட்சி சார்பில் வணிக வளாகம் மற்றும் திருமண மண்டபம் கட்டப்பட உள்ளது" என்றார்.

 

அதேபோல் நகர்மன்ற துணைத்தலைவர் முத்துகுமரன் பேசுகையில், "நகராட்சி பகுதியில் குடியிருந்த 300க்கும் மேற்பட்டவர்களின் வீடுகள் ஆக்கிரமிப்பு வீடுகள் என இடிக்கப்பட்டது. அவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து வழங்க வேண்டும், மின் விளக்கு, குடிநீர் மக்களுக்கு தங்கு தடையின்றி வழங்க வேண்டும்” என்று பேசினார். நகர்மன்ற உறுப்பினர் தாரணி அசோக் பேசுகையில், "கடந்த ஒரு வருடமாக பேருந்து நிலையத்தில் அனைவருக்கும் இடையூறு ஏற்படுத்தி வரும் ஒரே இடத்தில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இதனால் பள்ளி செல்லும் மாணவிகள், பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் டாஸ்மாக் கடை அருகே நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது எனவே இதனை மாற்ற வேண்டும்" எனப் பேசினார். இதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர் மழுப்பலாகப் பதில் கூறினார்.

 

மன்ற உறுப்பினர் கல்பனா சண்முகசுந்தரம் பேசுகையில், "ஒரு ஆண்டில் இவ்வளவு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை ஏன் சிதம்பரம் நகராட்சி வெப்சைட்டில் பதிவு செய்யவில்லை. பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். "இதற்கு உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்" என  நகர்மன்றத் தலைவர் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.