Skip to main content

சிதம்பரம் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்!

Published on 06/04/2020 | Edited on 06/04/2020


கரோனா தொற்று உலக நாடுகளில் உள்ள பொதுமக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனையொட்டி  தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. 
 

chidambaram municipal corporation employees


இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் விதமாக சிதம்பரம் நகராட்சியில் உள்ள 150- க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் நகர் முழுவதும் குப்பைகளை அகற்றி கிருமி நாசினி தெளித்து கடுமையானப் பணிகளைத் தினம்தோறும் செய்து வருகிறார்கள்.
 

chidambaram municipal corporation employees


இவர்களுக்குச் சிதம்பரம் நகராட்சி சார்பில் தலா 25- கிலோ அரிசி, முகக் கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சியில் நடைபெற்றது.இதில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர் அனைவருக்கும்  பொருட்களை வழங்கினார். பின்னர் சிதம்பரம் நகராட்சி சார்பில் சமூகப் பரவலை தடுக்கும் விதமாக ரூ.100 மதிப்புள்ள காய்கறிகள் கொண்ட தொகுப்பை அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.  


இதனையும் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் தொடங்கி வைத்து தெருக்களில் வரும் பொதுமக்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, நகராட்சி பணியாளர்கள், ஊழியர்கள், சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன், மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

சிதம்பரத்தில் இ.பி.எஸ். பிரச்சாரம்; பொதுக்கூட்ட பணிகள் தீவிரம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Edappadi Palaniswami is campaigning in Chidambaram on 31st

சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறார். அதேபோல் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர் சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு கேட்டு வரும் 31 ஆம் தேதி சிதம்பரம் புறவழிச் சாலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதனையொட்டி பொதுக்கூட்டம் மேடை அமைப்பதற்காகப் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.