chithambaram

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் கடந்த 55 நாட்களாக, தமிழகத்தில் மற்ற அரசு மருத்துவ கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வசூலிக்க வலியுறுத்தி தொடர்ந்து அறவழியில் நூதனமான முறையில்பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Advertisment

இதனிடையேமாணவர்களின் போராட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களும்ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மாணவர்களின் கல்வி கட்டணம் குறித்து இதுவரை தமிழக அரசு அரசாணை வெளியிடவில்லை. கடந்ததிங்கள்கிழமை அரசாணை வெளியிடுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மத்தியில் மாணவர்கள் மத்தியில் உறுதி கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாணவர்கள் அறவழி போராட்டத்தை, காத்திருப்புப் போராட்டமாக நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று (01.02.2021) தமிழக அரசு, மாணவர்களின் கல்வி கட்டணம் குறித்து அரசாணை வெளியிடுவதில் தாமதம் ஆகிறது என்று கூறப்படுவதால்,மாணவர்கள் ஒற்றைக்காலில் நின்று அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு கட்டணம் வசூலிக்க வேண்டும் என ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதேநேரத்தில் பிப்ரவரி 2ஆம் தேதி (இன்று) சட்டசபை கூட உள்ள நிலையில், இதுகுறித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்ப உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.அதே நேரத்தில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு அரசாணை வெளியிட வேண்டும் எனவும் மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அரசாணையை கண்ணில் காண்பித்தால் போதும், நாங்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்வோம் என மாணவர்கள் சார்பில் கூறப்படுகிறது.