Skip to main content

ராஜா முத்தையா மருத்துவமனை கரோனா சிறப்பு வார்டில் 245 பெட் தயார்... மருத்துவ கண்காணிப்பாளர் தகவல்

Published on 25/04/2020 | Edited on 25/04/2020

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டுபாட்டில் இருந்த ராஜா முத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனையை, தற்போது நடைபெற்ற சட்டமன்ற கூட்டதொடரில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியாக அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து அங்கு கரோனா தொற்றுக்கான சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு பல்வேறு கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.


  cdm


இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட அனைவரையும் இங்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்ட 26 பேரும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தற்போது 18 பேர் வீடு திரும்பியுள்ளனர். மீதி 8 பேர் மட்டுமே சிறப்பு வார்டில் உள்ளனர்.
 

 nakkheeran app



இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவ கண்காணிப்பாளர் சண்முகம் கூறுகையில், தற்போது அரசு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்களை கண்காணிக்கும் வார்டுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. 7 வென்டிலேட்டர் ஒதுக்கீடு செய்து தற்போது 2 வந்துள்ளது. இதனை அவசர சிகிச்சை மற்றும் வார்டு பகுதியில் வைத்துள்ளோம், விரைவில் 5 வரவுள்ளது. அதேபோல் கடலூர் மாவட்டத்தில் தொற்று சம்பந்தமாக எடுக்கப்படும் ஆய்வு முடிவுகள் விழுப்புரம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, முடிவுகள் வருவதற்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆனது, இதனால் சிரமம் இருந்து வந்தது.

 

uu

இதனைதொடர்ந்து இந்த மருத்துவமனையிலே ஆய்வு மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் அனுமதியுடன் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் தொகுதி மேம்பாட்டு நிதியில், ரூ 32.63 லட்சம் பெற்று தொற்று கண்டறியும் கருவி வாங்கப்பட்டது. அதில் தற்போது கடலூர் மாவட்டம் முழுவதும் எடுக்கப்படும் சேம்பில் கொண்டு முடிவுகளை துல்லியமாக அறிவித்து வருகிறோம். கடந்த மூன்று நாட்களாக பாசிட்டிவ் கேஸ் இல்லை.

மேலும் இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் 196 பேர், பி.ஜி. மருத்துவர்கள் 245, சி.ஆர்.ஐ. மருத்துவர்கள் 325 பேர், நர்சுகள் 275 பேர், கடைநிலை ஊழியர்கள் 140 பேர் உள்ளிட்ட 1800 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஷிப்டு முறையில் பணியாற்றி வருகிறார்கள்.

கரோனா சிறப்பு வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவருக்கும் முழுகவச உடை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் 6 நாட்கள் வேலை பார்த்தால் இருவாரம் ஓய்வுக்கு பின்னர் அவர்களை கரோனா தொற்று சோதனை செய்து மீண்டும் பணிக்கு அனுமதிக்கப்படுகிறது.

கரோனா  தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு காலையில், முதலில் கபசுரக் குடிநீர், பின்னர் இட்லி சாம்பார். மதியம் தக்காளி, எலுமிச்சை சாதம், முட்டை, மாலையில் சுண்டல், இரவு சப்பாத்தி குருமா, ரவா கிச்சடி உணவுகள் வழங்கப்படுகிறது. மேலும் ஹைட்ராக்சிகுளோரோகுயின், அசித்ரோமைசின், சிங்க் வகை மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

மருத்துவமனையில் தற்போது கரோனா தொற்றுக்காக 245 பெட் தயார் நிலையில் உள்ளது. திடீர் என்று அதிக தொற்று வந்தால் சமாளிப்பதற்காக மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து வகை ஊழியர்களையும் ஓய்வில் தனிமை படுத்தி வைத்துள்ளோம்.

நோய் தொற்று பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து அச்சத்தின் காரணமாக வருபவர்களை தனிமைப்படுத்த தனித்தனியாக பல்கலைக்கழக பொறியியல் துறையில் உள்ள கட்டிடத்தில் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. 48 மணி நேரத்தில் மருத்துவமனை உள்ளிட்ட சிறப்பு வார்டுகளை கண்காணிக்கும் வகையில் அதிநவீன வசதிகளுடன் 32 கண்காணிப்பு கேமராக்களை அரசு நிறுவியுள்ளது. இதனால் என் அறையில் இருந்தே கரோனா தொற்று நோயாளிகள் உள்ள வார்டில் என்ன நடக்கிறது. என்று கண்காணிக்க முடிகிறது.

அங்கு நோயாளிகள் கூட்டமாகவும், முக கவசம் இல்லாமல் இருந்தால் முக கவசம் போடுவதற்கு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் கரோனா தொற்று நோயாளிகள் வெளியே செல்லாமலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது. பொதுமக்களுக்கு யாருக்கும் இந்த தொற்று வரமால் இருக்க அதிகளவில் வெளியில் வரவேண்டாம். தற்போதுள்ள நிலைமாற்றப்பட்டால் அதிக தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் கூறினார். இவருடன் குழந்தைகள் நல மருத்துத்துறை தலைவர் மருத்துவர் ராமநாதன் உள்ளிட்ட மருத்துவர்கள் உடன் இருந்தனர்.     


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.