Skip to main content

சிதம்பரம் தொகுதி ஒரு பார்வை: களத்தில் விசிக – அதிமுக வேட்பாளர்கள்!

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி (தனி)  கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் அரியலூர்  மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. தொகுதி சீராய்வுக்கு முன் கடந்த 1957ம் ஆண்டு முதல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில், சிதம்பரம் தொகுதியில் அதிகபட்சம் காங்கிரஸ் 6 முறை, தி.மு.க., 4 முறை, பா.ம.க., 3 முறையும், அ.தி.மு.க., 2 மற்றும் வி.சி.,கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

 

chithamparam

 

1957ம் ஆண்டு நடந்த தேர்தலில்  காங்., கட்சியின் கனகசபை பிள்ளை, அதே ஆண்டில் நடந்த தேர்தலில் இளையபெருமாள், 1962 -ல் கனகசபை பிள்ளை வெற்றி பெற்றனர். 1984 - 1991 வரையில் நடந்த மூன்று தேர்தல்களில் வள்ளல்பெருமான் வெற்றி பெற்று சிதம்பரம் தொகுதியை கையில் வைத்திருந்தார்.1967 மற்றும் 1971 தேர்தலில் தி.மு.க., மாயவன் எம்;பி.,யாக இருந்தார். 1980ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க., குழந்தைவேலுவும், 1996ல் தி.மு.க., சார்பில் கணேசனும் போட்டியிட்டு எம்.பி., யாக வெற்றி பெற்றனர். 1998 தேர்தலில் பா.ம..க, தொகுதியை கைப்பற்றி, 2004 வரையில் மூன்று முறை பா.ம.க., வெற்றியை தக்க வைத்திருந்தது. தலித் எழில்மலை ஒரு முறையும், பொன்னுசாமி இருமுறையும் எம்.பி.,யாக இருந்தனர். 1977 தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டி இட்ட முருகேசனும், 2014 தேர்தலில் அ.தி.மு.க., சந்திரகாசியும் வெற்றி பெற்றனர்.நான்கு முறை தொடர்ந்து போட்டியிட்ட வி.சி., கட்சி, 2009 தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் திருமாவளன் எம்.பி.,யாக இருந்தார்.

 

chithamparam

 

சிதம்பரத்தில் மூன்று முறை வெற்றி பெற்று தொகுதியை கோட்டையாக வைத்திருந்த பா.ம.க., இந்த தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட விரும்பாமல் பின்வாங்கியுள்ளது.  இந்த முறை திமுக தலைமைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில்  சிதம்பரத்தில் சுயேச்சை சின்னத்தில் விடுதலை சிறுத்ததைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் 5-வது முறையாக போட்டியிடுகிறார். இவர் அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் தொல்காப்பியன், பெரியம்மாள் ஆகியோருக்குக் கடந்த 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17-ம்  தேதி பிறந்தார். பி.எஸ்ஸி வேதியியல், எம்.ஏ. கிரிமினாலஜி, பி.எல், பி.ஹெச்டி படித்துள்ளார். மேலும், தமிழக அரசின் தடவியல் துறையில் அறிவியல் உதவியாளராக பணியாற்றி வந்தார். பின்பு 1999-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட தன் அரசுப் பணியை ராஜினமா செய்தார். இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

 

chithamparam

 

இவருக்கு எதிராக  அ.தி.மு.க. சார்பில் அரியலுர் ஒன்றிய முன்னாள் அதிமுக செயலாளர் சந்திரசேகரன் போட்டியிடுகிறார்.  இவர் அரியலூர் மாவட்டத்தில் உணவகம் மற்றும் லாட்ஜ் நடத்தி வருகிறார். சென்னை கோயம்பேடு பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார்.

 

 

chithamparam

 

அதே போல் அ.ம.மு.க சார்பில் வழக்கறிஞரும்,ஐ.எ.எஸ். அகாடமி நிறுவனருமான இளவரசன் போட்டியிடுகிறார்.

 

வெற்றிக்கனி யாருக்கு என களம் தான் முடிவு செய்யபோகிறது. விரைவில் கள நிலவரம் குறித்து சந்திப்போம்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.