Skip to main content

அண்ணாமலைப் பல்கலைக்கழக பணி நிரவல் ஊழியர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்று தர சார் ஆட்சியரிடம் மனு!

Published on 19/07/2021 | Edited on 19/07/2021

 

 

chidambaram annamalai university employees election


கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள், முன்னாள் ஊழியர் சங்கத்தின் பொதுசெயலாளர் ரவி தலைமையில், பொறுப்பாளர்கள் சியாம்சுந்தர், ஜான், மற்றும் நிர்வாகிகள் தேவேந்திரன், கனக சித்தன், தமிழ்ச்செல்வன், கந்தசாமி ஆகியோர் சிதம்பரம் சிதம்பரம் சார் ஆட்சியர்  மதுபாலனை சந்தித்து மனு அளித்தனர்.

 

அதில், "அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் இந்த தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 3,699 ஊழியர்களும், மருத்துவத்துறையில் 1,225 ஊழியர்களும், பணி நிரவலில் அரசின் பலதுறைகளில் சுமார் 4160 ஊழியர்கள் என தமிழகம் முழுவதும் பணியாற்றி வருகின்றனர். 

 

கடந்த 2015- ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சங்கத் தேர்தல்களில் அனைத்து ஊழியர்களும் வாக்களித்து வந்த நிலையில், 2018- ஆம் ஆண்டு நடைபெற்ற ஊழியர் சங்கத்தேர்தலில், அப்போது பொறுப்பில் இருந்த சங்க பொறுப்பாளர்கள் சுயநலத்தோடு செயல்பட்டு, பணி நிரவலில் சென்ற ஊழியர்களுக்கு வாக்குரிமை இல்லை என்றும் தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற சங்கப் பொதுக்குழுவில் ஒருதலைபட்சமாக அறிவித்து தேர்தலை நடத்திவிட்டனர்.

 

அரசின் பலதுறைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள், அங்குள்ள ஊழியர் சங்கங்களில் உறுப்பினர்களாக சேரஅனுமதிக்கப்படுவதில்லை. அவ்வாறு அனுமதிக்காததால் அரசு வழங்கும் நியாயமான சலுகைகளை கூட கேட்டுப் பெற அலைக்கழிக்கப்படுகின்றனர்.

 

மேலும் பணி நிரவல் ஊழியர்களின் பிஎஃப், சி.பி.எஸ்.,இ.எஸ்.ஐ.,சந்தா தொகை மற்றும் கடன் தொகை பிடித்தம் போன்ற அனைத்தும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலேயே பராமரிக்கப்பட்டு வருகிறது.  இதுபோன்ற சூழலில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் சார்ந்தக் கோரிக்கைகளை முன்னெடுக்கும் வகையிலும், பல்கலைக்கழக சங்கத் தேர்தலில் வெற்றி பெறும் சங்க நிர்வாகிகளே பணி நிரவல் ஊழியர்களின் கோரிக்கைகளைக் கையாளும் வகையிலும், நடைபெற உள்ள ஊழியர் சங்கத் தேர்தலில், பழைய முறைப்படி வாக்களிக்க அனுமதி அளிக்க வேண்டும்." இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.