Skip to main content

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக  மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகத் தொடக்கம்

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

 


 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககம் 2019-20ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகத் தொடக்கவிழா தொலைதூரக்கல்வி இயக்கக நிர்வாக அலுவலகத்தில் நடை பெற்றது.

 

a

 

பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமோகன் தலைமை வகித்தார். பல்கலைக்கழக துணைவேந்தர்  முருகேசன் கலந்து  குத்துவிளக்கை ஏற்றி  2019-20ம் கல்வி ஆண்டிற்கான  சேர்க்கை விண்ணப்பத்தினை மாணவர்களுக்கு வழங்கி விநி யோகத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக தொலைதூரக் கல்வி இயக்கக இயக்குநர் பேராசிரியர்   அருள் வரவேற்று பேசினார்.


 புல முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், தொலைதூரக்கல்வி துறை ஒருங்கினைப்பாளர்கள், துணைவேந்தரின் மருத்துவத்துறை ஆலோசகர் டாக்டா சிதம்பரம், மருத்துவப்புல கண்காணிப்பாளர், இணை தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி, பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் துணைவேந்தர் முருகேசன் பேசுகையில்,  பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தில்  இந்த ஆண்டு 53 படிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அறிவியல், கலை அறிவியல், மேலாண்மை, கல்வியில், தொழில்நுட்ப கல்வி, விவசாயகல்வி, கணினி, இசை மற்றும் யோகா  போன்ற வேலை வாய்ப்பு சம்மந்தமான 268 படிப்புகள் நடத்தப்படுகின்றன. 2019-20ஆம் கல்வியாண்டில் புதிதாக கீழ்கண்ட முதுநிலை யோகா பட்ட மேற்படிப்பு உள்ளிட்ட 8 புதிய படிப்புகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. 

 

சென்ற கல்வியாண்டில் (2018-2019) தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் 98,839 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு 1லட்சத்து 25 ஆயிரத்தில் இருந்து 1 லட்சத்து 30ஆயிரம் வரை மாணவர் சேர்க்கைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு தற்போது தமிழகத்தில் 55 (அண்ணாமலைநகர் உட்பட), பிற மாநிலங்களில் 18 என மொத்தம் 73 படிப்பு மையங்கள் உள்ளன. மேலும் தொலைதூரக் கல்வி இயக்கக கல்வி கட்டணம்  எக்காரணத்தை கொண்டும் உயர்த்தப்பட மாட்டாது. 

 

தொலைதூரக்கல்வி இயக்ககம் மூலம் பயில விரும்புகின்ற மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து படிப்பு மையங்களிலும் இன்று(16ம் தேதி) முதல் விண்ணப்பங்களை பெற்று சேர்ந்து கொள்ளலாம். மேலும் பல்கலைக்கழக இணையதளம் www.annamalaiuniversity.ac.in or www.audde.in மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் குறைதீர்க்கும் மைய தொலைபேசி எண்கள: 04144–238044 - 238047, 238610.தொலைதூரக்கல்வி இயக்கக மாணவர்களின் குறைதீர்க்கும் மைய மின்னஞ்சல் auddegrievance@gmail.comஆகும் என கூறினர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணாமலை பல்கலை சார்பில் பழங்குடியின பெண்களுக்கு இலவச கணினி பயிற்சி

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
NN

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை, பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு அரசு மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனம், கொல்லிமலை இணைந்து இந்தியா சியாட்டில் குழு அமெரிக்கா உதவியுடன் பழங்குடியின பெண்களுக்கு 3 மாத இலவச கணினி பயிற்சி தொடக்க நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நடைபெற்றது.

இந்த பயிற்சித் திட்டத்திற்கு பல்கலைக்கழக முனைவர் பாலமுருகன் வரவேற்றார். கணினி மற்றும் தகவல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் என்.புவியரசன் திட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில் 'கணினிகள் நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டதால், அனைவரும் அறிந்திருக்க வேண்டும். இப்பயிற்சி பழங்குடியின பெண்களுக்கு பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளை பெற்று தருவதோடு அவர்களுக்கு தன்னம்பிக்கையை உருவாக்க உதவும்' எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் பாலமுரளிதர். பழங்குடியின கொல்லிமலை திட்ட அலுவலர் பீட்டர் ஞானராஜ், இந்தத் திட்டத்தின் முதன்மை ஆய்வாளர் ஜெயபிரகாஷ், காளியப்பன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு திட்டத்தின் பயன்கள் குறித்து பேசினார்கள். முனைவர்கள் பிரவீனா, சாய் லீலா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Next Story

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டியல் பழங்குடி மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

Annamalai University offers higher education opportunities to Scheduled Tribe students

 

அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல் வாழ் உயிராய்வு மையத்தில் பட்டியல் (இருளர்) பழங்குடி இன மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு.

 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கடல்வாழ் உயிரியல் மையம், பரங்கிப் பேட்டைப் பகுதியில் வாழும் இருளர் பழங்குடியின மக்கள் சார்ந்துள்ள நிலப்பரப்பிற்கான வளர்ச்சி சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளது. இம்மையத்தின் சார்பில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆராய்ச்சி திட்டத்தின் மூலம் சேற்று நண்டு வளர்ப்பு முறை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

 

இம்மையத்தால் இதுபோன்று நடத்தப்படுகின்ற பயிற்சிகளின் மூலம் கடல்சார் வாழ்வாதாரத்தை நம்பியுள்ள மக்கள் பயன் பெற்று வருகின்றனர். அதனால் அவர்களில் சிலர் கடல்சார் தொழில் முனைவோராகவும் உருவாகியுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரமும் உயர்ந்து வருகின்றது. இதற்குச் சான்றாக இந்த வருடம் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்று வரும் இரண்டு இருளர் பழங்குடியினர் குடும்பங்களைச் சார்ந்த மாணவிகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெற வாய்ப்பு பெற்றனர்.

 

அம்மாணவர்கள் B. Voc. Aquaculture துறையில் பயின்று வருகின்றனர். பல்கலைக்கழகம் அவ்விரு மாணவர்களுக்கும் தமிழக அரசின் பழங்குடியினர் நல கல்வி உதவித் தொகையைப் பெற்றுத் தந்து அவர்கள் உயர் கல்வியைத் தொடர உதவுகின்றது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அம்மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கதிரேசனை சந்தித்து நன்றி கூறினர்.