44வதுசெஸ்ஒலிம்பியாட்போட்டி சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கானஏற்பாடுகளைதமிழ்நாடு அரசு வெகு விமர்சையாக செய்துவருகிறது. தமிழ்நாடு முழுவதும்செஸ்ஃபீவரைஏற்படுத்தியுள்ளது. சென்னையில் அந்தஃபீவர்கொஞ்சம் கூடுதலாக உள்ளது. சென்னையில் திரும்பு இடங்கள் எல்லாம்செஸ்ஒலிம்பியாட்குறித்தானவிழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 44வதுசெஸ்ஒலிம்பியாட்போட்டி துவக்க நிகழ்ச்சியில்பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். நேருஉள்விளையாட்டுஅரங்கில் நடைபெறும் அந்த துவக்க விழாவிற்காக நேருஉள்விளையாட்டுஅரங்கு தயாராகிவருகிறது. அதேபோல், சென்னையில் உள்ள ஒருதனியார்பள்ளியில் மாணவ மாணவிகள் சதுரங்கத்தில் வரும், சிப்பாய்கள், குதிரைகள், யானைகள், ராஜா, ராணி போன்றவேஷங்களிட்டுவிழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, சென்னைமேயர்பிரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.
செஸ் ஒலிம்பியாட் ஃபீவரில் தமிழ்நாடு! (படங்கள்)
Advertisment