நிவர் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று மாலை முதல் மழை பெய்துவருகிறது. சென்னையில் நேற்று இரவு தொடர் மழை பெய்தது. அதனால் சென்னை முக்கிய சாலைகளை மழைநீர் சூழ்ந்தது.
மழைநீர் சூழ்ந்த காரணத்தினால், காலை போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. குறிப்பாக சாதாரனமாகவே நெரிசலாக இருக்கும் சென்னை சென்ட்ரல் ரோடு மழை காரணமாக மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையின் முக்கிய பகுதிகளான பிராட்வே, மன்னடி, பெரியமேடு சைடாம்ஸ் ரோடு, பட்டாளம் ஸ்ட்ரஹான்ஸ் ரோடு ஆகிய பகுதிகளில் மழை நீரும் போக்குவரத்து நெரிசலும் வாகன ஓட்டிகளை சிரமத்துக்குள்ளாக்கியது.