Skip to main content

சென்னை- திருச்சிக்கு அரசு பேருந்து இயக்கப்படவில்லை!

Published on 24/03/2020 | Edited on 24/03/2020

சென்னையில் இருந்து திருச்சி, மதுரை உள்ளிட்ட தொலைதூர ஊர்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டன. இன்று (24/03/2020) மாலை 06.00 வரை அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என கூறிய நிலையில் தற்போதே நிறுத்தப்பட்டுள்ளன.

chennai to trichy bus not running peoples

மேலும் சென்னையில் இருந்து விழுப்புரம் வரை மட்டுமே தற்போது அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் குறைந்த தொலைவில் உள்ள காஞ்சிபுரம், வேலூர், ஆரணி, திருவண்ணாமலை வரை மட்டுமே பேருந்துகள் செல்கிறது.


நேற்று (23/03/2020) மாலை முதல் பரபரப்பாக காணப்பட்ட சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.


 

சார்ந்த செய்திகள்