CHENNAI TASMAC NOT OPEN TN GOVT ANNOUNCED

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மே- 07 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்றும், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்றும் தமிழக அரசு நேற்று (04/05/2020) அறிவித்திருந்தது.

Advertisment

Advertisment

TASMAC

அரசின் இந்த முடிவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னையில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குப்பட்ட பகுதியில் மே 7- ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது. சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளது.

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் சென்னை காவல்துறை எல்லைக்குள் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.