Skip to main content

வீட்டை காலி செய்யக் கூறியவருக்கு நிகழ்ந்த சோகம்; இளம்பெண் கைது

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

chennai taramani house tennant woman srija incident 

 

சென்னை தரமணி கம்பர் தெருவைச் சேர்ந்தவர் சாந்தகுமாரி (வயது 56). இவருக்கு இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் மூவருக்கும் திருமணமாகி தங்களது குடும்பத்தினருடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். சாந்தகுமாரியின் மேல் வீட்டில் ஸ்ரீஜா (வயது 20) என்ற இளம்பெண் ஒருவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். மேலும், சாந்தகுமாரியின் இளைய மகளான உஷா தனது தாயாரின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார்.

 

இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராத தனது தாயாரான சாந்தகுமாரியை பார்த்து விட்டு வருமாறு தனது மகனிடம் கூறியுள்ளார். அப்போது அங்கு சென்று பார்த்தபோது கதவு திறந்த நிலையில் இருந்ததோடு தனது பாட்டி கீழே விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த உஷாவின் மகன், இது குறித்து உஷாவிடம் கூறியுள்ளார். உடனடியாக உஷா தனது தாயாரை சென்று பார்த்தபோது தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் இது குறித்து தரமணி போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளார்.

 

மேலும், வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டு விசாரணை செய்தபோது, பீரோவில் இருந்த 3.5 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், போலீசார் இது தொடர்பாக நடத்திய தீவிர விசாரணையில் ஸ்ரீஜா வாடகைக்கு குடியிருந்து வரும் மேல் வீட்டை ஒருவருக்கு 3.5 லட்சத்துக்கு குத்தகைக்கு விட முடிவு செய்து அவரிடம் இருந்து பணத்தை பெற்று தனது வீட்டில் இருந்த பீரோவில் சாந்தகுமாரி வைத்திருந்தார். மேலும் ஸ்ரீஜாவை வீட்டில் இருந்து காலி செய்யவும் கூறி உள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டை விட்டை காலி செய்த ஸ்ரீஜா சாந்தகுமாரியின் வீட்டில் புகுந்து பீரோவில் வைத்திருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடிப்பதை பார்த்த சாந்தகுமாரிக்கும்  ஸ்ரீஜாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஸ்ரீஜா சாந்தகுமாரியை கீழே தள்ளிவிட்டதில் படுகாயம் அடைந்து உயிரிழந்துள்ளார். பின்னர் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து ஸ்ரீஜா தப்பிச் சென்றது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து ஸ்ரீஜாவை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தரமணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.