'சிறப்பு புறநகர் ரயிலில் தனியார், ஊடக ஊழியர்களும் செல்லலாம்' -தெற்கு ரயில்வே அறிவிப்பு

chennai special local trains allowed the private companies employees

சென்னை சிறப்பு புறநகர் ரயில் சேவை தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'புறநகர் ரயில்களில் தனியார் நிறுவன ஊழியர்கள், மின்னணு, அச்சு ஊடக ஊழியர்களும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அனைத்து கல்வி நிறுவனங்கள், அத்தியாவசிய சேவையாற்றும் நிறுவனங்கள், குழந்தைகள் நல அமைப்பு, முதியோர் இல்லங்கள், பாதுகாப்பு ஏஜென்சி ஊழியர்களும் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம்.

பார் கவுன்சிலில் உறுப்பினராக உள்ள வழக்கறிஞர்களும் சிறப்பு புறநகர் ரயில்களில் பயணிக்கலாம். ரயில்களில் பயணிக்க ஊழியர்கள் தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களில் இருந்து புகைப்படம் ஒட்டிய கடிதத்தை பெற வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு புறநகர் ரயிலில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தெற்கு ரயில்வே இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai local trains Southern Railway
இதையும் படியுங்கள்
Subscribe