Skip to main content

சம்மன் வாங்காத தயாநிதி மாறனுக்கு புதிய சம்மன்! -அரசைக் கண்டித்து போராட்டம் நடத்திய வழக்கில் உத்தரவு!

Published on 27/12/2019 | Edited on 27/12/2019

தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தியது தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வழங்கிய சம்மனை  தயாநிதிமாறன் வாங்கவில்லை என, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு, பஸ் டிக்கெட் விலையை உயர்த்தியதைக் கண்டித்து, 2018 ஜனவரி 29- ஆம் தேதி, தயாநிதிமாறன் தலைமையில்  தி.மு.க.,வினர், சென்னை சேத்துப்பட்டு சிக்னலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

chennai special court summons dhayanidhi maran not have it police


இது தொடர்பாக, சேத்துப்பட்டு காவல்துறையினர், தயாநிதிமாறன் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
 

இந்த வழக்கில் ஆஜராகுமாறு, தயாநிதிமாறன் உட்பட 20 பேருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால், தயாநிதிமாறனைத் தவிர, 19 பேர் நீதின்றத்தில் ஆஜராகினர். தயாநிதிமாறனுக்கு சம்மன் கொடுத்தால் தயாநிதிமாறன் தரப்பில் வாங்கவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையைடுத்து, மீண்டும் புதிய சம்மன் வழங்க, போலீசாருக்கு உத்தரவிட்டு, ஜனவரி 8- ஆம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தயாநிதி மாறனை ஆதரித்து மு.க.தமிழரசு வாக்கு சேகரிப்பு (படங்கள்)

Published on 03/04/2024 | Edited on 03/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், நேற்று (02-04-24) மத்திய சென்னை மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து மு.க. தமிழரசு தி.நகர் பகுதி வாக்காளர்களிடம் தீவிரமாக வாக்கு சேகரித்தார். 

 

படங்கள் - எஸ்.பி.சுந்தர்

Next Story

மகளுடன் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தீவிர பிரச்சாரம் (படங்கள்)

Published on 02/04/2024 | Edited on 02/04/2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திமுக சார்பில் மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 'கண்டிப்பாக வர இருக்கும் தேர்தலில் கடந்த தேர்தலை விட அதிகமான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற செய்வீர்கள் என்று நம்புகிறேன். முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். பத்து ஆண்டுகளாக நரேந்திர மோடி இந்தியாவை ஆண்டார். குறிப்பாக 2021-க்கு முன்பு இங்கிருந்த அடிமை ஆட்சியை வைத்து தமிழகத்திற்கு ஒரு நல்ல காரியத்தையும் செய்யவிடாமல் நம்மை ஏமாற்றி இருக்கிறார்கள்” என்றார். பிரச்சாரத்தின் போது அவரது மகளும் உடனிருந்தார்.

படங்கள் : எஸ்.பி.சுந்தர்