பெண் என்ஜினீயர் 8வது மாடியில் இருந்து விழுந்த வழக்கில் திடீர் திருப்பம்...அதிர்ச்சி தகவல்!

திருச்சியை சேர்ந்தவர் ஜூலியஸின் மகள் டேலிதா ஜூலியஸ் அவருக்கு வயது 24. சென்னையில் அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே தற்கொலை செய்துகொண்டார் என்று செய்தி பரவியது. அப்போது இது பற்றி விசாரித்த போது, சென்னை தி.நகரில் வசித்து வந்துள்ளார். செப்டம்பர் 19ஆம் தேதி அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அன்று இரவு திடீரென அந்த நிறுவனத்தின் 8-வது மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

software engineer

தற்போது பெண் என்ஜினீயர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, டேனிதா ஜூலியஸ் மாரத்தான் போட்டியில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். பல்வேறு மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை போலீசாரிடம் அவரது பெற்றோர் காண்பித்துள்ளனர். மேலும் டேனிதா ஜூலியஸ், தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்புவார். இதற்காக அவர், எங்கு சென்றாலும் ‘லிப்டை’ பயன்படுத்தாமல் படிக்கட்டுகளையே அதிகம் பயன்படுத்துவார் எனவும் அவரது பெற்றோர் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், நேற்றுமுன்தினம் இரவு பணி முடிந்த பிறகு டேனிதா ஜூலியஸ், சாப்ட்வேர் நிறுவன கட்டிடத்தின் மாடி படிக்கட்டுகளில் உடற்பயிற்சிக்காக ஏறி இறங்கியதும், இதில் அவர் நிலைதடுமாறி 8-வது மாடியில் இருந்து தவறிவிழுந்து பலியானதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Ambattur Engineering girl industrial estate private companies
இதையும் படியுங்கள்
Subscribe