Skip to main content

சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழி சாலையாக அமைக்க மக்கள் கோரிக்கை!

Published on 15/09/2019 | Edited on 15/09/2019

தியாகதுருகம் புறவழிச்சாலையில் கடந்த மூன்று மாதங்களில் நடைபெற்ற விபத்தில் மொத்தம் 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளது. இந்நிலையில் சென்னையிலிருந்து சேலம் மற்றும் கோவை ஆகிய நகரங்களுக்கு அரசு பேருந்துகள், சொகுசு பேருந்துகள், லாரிகள், கார்கள் ஆகியவை வந்து செல்கின்றன. இவ்வாறு வரும் வாகனங்கள் தியாகதுருகம் புறவழிச்சாலையில் புக்குளம் மேம்பாலம் மற்றும் விருகாவூர் மேம்பாலம் ஆகிய இரண்டு மேம்பாலங்களில் முன்னால் செல்லும் வாகனங்களை முந்திச் செல்ல முயலும் போது விபத்துக்கள் ஏற்படுகின்றன. 

மேலும் நான்கு வழிச்சாலையில் வரும் வாகன ஓட்டிகள் திடீரென புறவழிச்சாலையில் (இரண்டுவழி சாலையில்) வருவதால் எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகளால் நிலைதடுமாறி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி லாரி மீது பஸ் மோதியதில் மூன்று பேர் உடல் நசுங்கி பலியானார்கள், 4 பேர் படுகாயமடைந்தனர். அதன் தொடர்ச்சியாக ஜூலை 18 ஆம் தேதி லாரி மோதி தொழிலாளி ஒருவர் பலியானார். மேலும் ஆகஸ்ட் 13- ஆம் தேதி பஸ் மீது கார் மோதியதில் கணவன் மனைவி படுகாயம் அடைந்தனர்.  செப்டம்பர் 2 ஆம் தேதி லாரி மீது ஆம்னி பஸ் மோதியதில் டிரைவர் பலியானார் 21 பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று காலை கார் சாலையோர ஒடை பள்ளத்தில் கவிழ்ந்ததில் 4 பேர் பலியானார் 2 பேர் படுகாயம் அடைந்தனர். கடந்த மூன்று மாதங்களில் தியாகதுருகம் புறவழி சாலையில் விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர், 29 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

chennai to salem high way  4 roads need to peoples

எனவே தியாகதுருகம் புறவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றினால் மட்டுமே விபத்துகள் குறையும். மேலும் தற்காலிகமாக புறவழிச்சாலையில் ஒளிரும் தன்மை கொண்ட வேகத்தடைகளை அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்துக்கள் நடைபெறுவதை குறைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நடவடிக்கை எடுக்க  வேண்டும் என வாகன ஓட்டிகளும், அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர். அதேபோல் உளுந்தூர்பேட்டை- சேலம் தேசிய நெடுஞ்சாலை எண் 7. இந்த சாலை நான்கு வழிச்சாலையாக ஆரம்பிக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டது. ஆனால் எலவாசனூர் கோட்டை .தியாகதுருவம், கள்ளக்குறிச்சி. சின்னசேலம், ஆகிய நகரங்கள் வழியே செல்லும் புறவழிச்சாலை பகுதிகளில் இரு வழிச்சாலை மட்டும் போடப்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலைக்கு தேவையானஅளவில் திட்ட மதிப்பீடுகள் போடப்பட்டது.

chennai to salem high way  4 roads need to peoples


அதற்காக தண்ணீர் செல்லும் பாலங்கள் கூட அகலப்படுத்தப்பட்டு கட்டப்பட்டுள்ளன. ஆனால் சாலையை மட்டும் இரு வழி சாலையாக குறுக்கி போட்டுவிட்டனர். உளுந்துார்பேட்டை-  சேலம் வழிகளில் இருந்து எதிரும், புதிருமாக வரும் வாகனங்கள் நான்கு வழி சாலைதான் என்று வேகமாக வருகிறார்கள். அப்படி வரும் போது திடீர் என்று இரு வழி சாலையாக குறுகியுள்ளதால் வாகன ஓட்டிகள் தெரியாமல் வாகனங்கள் மோதிக் கொள்வதும் நிலை தடுமாறியும் விபத்துகள் ஏற்பட்டு விலை மதிப்பற்ற மனித உயிர்கள் பலியாகி வருகின்றன.

நான்கு வழி சாலை முழுமையாக போட்டுவிட்டதாக கணக்கு காட்டிவிட்டு புறவழி சாலைகளில் மட்டும்இரு வழி சாலையாக போட்டதன் மூலம் கோடிக்கணக்கில் பணமோசடி நடந்திருக்குமோ? என்கிறார்கள் இப்பகுதி மக்கள். டோல்கேட்டுகளில் அடிக்கடி வாகன கட்டணங்களை உயர்த்தி பணம் பிடுங்கும் மத்திய அரசின் தரை வழி போக்குவரத்து துறை இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது மனித உயிர்களை பறிக்கும் துறையாக உள்ளதா? தேசிய நெடுஞ்சாலை துறை என்கிறார்கள் மக்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.