சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி ஆலோசனை செய்தனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72- வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது பற்றி ஆலோசனை செய்ததாக தகவல் கூறுகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவின் அம்மா பேரவை மாநில செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

chennai rayapettah admk office eps and ops discussion

Advertisment

கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, "என்னைப்போல் ஜெ. பேரவையினர் தன்னலமற்று பணி செய்தால் உயர்ந்த பதவிக்கு வர முடியும். ஜெயலலிதா பிறந்த நாளில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்" என்றார்.