Advertisment

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், நீலகிரி, கோவை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மதிமான மழையும், இதர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தது.

Advertisment

மேலும் சென்னையை பொறுத்தவரை இன்று வானம் பொதுவாக மேக மூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் இலேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது. அதன்படி இன்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடனும் இலேசான மழையும் பெய்தது.