ADVERTISEMENT
ADVERTISEMENT
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெப்ப நிலை 100 செல்சியஸை தாண்டி மக்களை வாட்டி வதைக்கிறது. அதிலும் சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இன்று பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. ஆலந்தூர், கிண்டி, வடபழனி ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
மேலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Show comments