கரோனா பரவலின் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்ட சென்னை புத்தகக் கண்காட்சி வரும் 16ஆம் தேதி முதல் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது. பதிப்பாளர்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று புத்தகக் காட்சி நடத்தும் பபாசி அமைப்பினர் செய்தியாளர்களைச் சந்தித்து புத்தகக் கண்காட்சி குறித்து விளக்கினர்.

Advertisment