Skip to main content

சென்னை அருகே வெடிக்காத ராக்கெட் லாஞ்சர் குவியல்... தீவிரவாதிகளுக்கு தொடர்பா?

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

சென்னைக்கு அருகே அனுமந்தபுரம் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இங்கு பலகட்டமாக துப்பாக்கி, ராக்கெட் லாஞ்சர் போன்ற சுடும் பயிற்சிகள் நடத்தப்படும். அதே நேரத்தில் துப்பாக்கி மற்றும் லாஞ்சர்களில் இருந்தும் வெளியேறும் குண்டுகளின் குப்பிகளை அப்படியே விட்டுவிடுவது வழக்கம். அதில் பல வெடிக்காத குண்டுகளும் இருக்கும் சில நாட்கள் மட்டும் தொடரும், இந்த பயிற்சி முடிவடைந்த பின் அப்பகுதி மக்கள் கீழே சிதறிக்கிடைக்கும் குண்டுகளில் உள்ள அலுமினியம், செம்பு, அலுமினியம் போன்ற உலோக குப்பிக்களை சேகரித்து இரும்பு கடையில் விற்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றன. 

CHENNAI POLICE TRAINING INCIDENT POLICE INVESTIGATION


அந்த நேரத்தில் சில வெடிக்காத குண்டுகளும் கிடைக்கும். சில சமயம் அது வெடித்து விபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கடந்த மானமதி பகுதியில் ஏற்பட்ட விபத்திலும் இரண்டு சிறுவர்கள் பலியானார்கள். இந்த நிலையில் டிசம்பர் 10- ஆம் தேதி அன்று அனுமந்தபுரம் அன்னை இந்திரா நகரை சேர்ந்த ராமு என்கிற ராமகிருஷ்ணன். அந்த பகுதியில் வெடிக்காமல் இருந்த குண்டுகளை பைக்கில் எடுத்து சென்ற போது, அது கீழே விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.


இதில் ராமகிருஷ்ணனின் வலது காலும் சிதறியது. அதே நேரத்தில் அருகே துணி துவைத்துக்கொண்டிருந்த கோவிந்தமாள் என்பவர் மீதும் குண்டு பாயிந்து காயமடைந்தார்கள். இருவரையும் மீட்டு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது தொடர்பாக மறைமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி கண்ணன் காயமடைந்துள்ள ராமகிருஷ்ணன் மயக்கம் தெளிந்த பின் தான் விசாரணை நடத்த முடியும் என்று கூறினார். 


மேலும் ராமகிருஷ்ணனின் வீட்டில் நடத்திய சோதனையில் வெடிக்காத பல ராக்கெட் லாஞ்சர்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இத்தனை லாஞ்சர் குண்டுகளை பதுக்கி வைத்துள்ளதில் பின்னணியில் ஏதோ தீவிரவாத தொடர்புள்ளதா? அல்லது யார் இதை பயன்படுத்த குவியலாக சேகரித்து வைத்துள்ளார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட எஸ்.பி தெரிவித்தார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.